Tuesday, June 23, 2015

மாம்பழம் சாப்பிடலாம் வாங்க...!



மாம்பழம் சாப்பிடலாம் வாங்க...!

மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.

பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊறவைக்கும். மாம்பழச்சாறு நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.

மாங்காய் அமிலத்தன்மை கொண்டது. இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண, வைட்டமின் சி பற்றாக்குறை நீங்கும். மாங்காயை நறுக்கி, வெயிலில் உலர்த்தி, மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண, வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் ஸ்கேவி நோய் குணமாகும்.

மாங்காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த இரத்த பேதி நிற்கும். வயிற்று உள்ளுறுப்புக்கள் பலப்படும். மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும். மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத்துச் சாப்பிட்டால் பசி ஏற்படும். குமட்டல் நீங்கும்

Thursday, June 18, 2015

சுண்டக்காயின் மருத்துவ குணம்..!



சுண்டக்காயின் மருத்துவ குணம்..!
-------------------------------------
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

மருத்துவக் குணங்கள்:
-----------------------------
பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.
சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.

சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.

சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.

சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.
சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.
சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.

பலாப்பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்




பலாப்பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் :-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பழங்களிலேயே பலாப்பழம் இனிப்பான சுவையை மட்டும் கொண்டிருப்பதில்லை. அதனுள் ஏகப்பட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, தையமின், ரிபோஃப்ளேவின், நியாசின், மக்னீசியம் மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல் :-

பலாப்பழத்தில் நல்ல அளவில் வைட்டமின் சி இருப்பதால், அவை உடலைத் தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும். குறிப்பாக வைட்டமின் சி, வெள்ளையணுக்களின் வலுவை அதிகரிக்கும் தன்மையுடையவை. எனவே ஒரு கப் பலாப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியானது கிடைக்கும்.

புற்றுநோயை தடுக்கும் :-

இப்பழத்தில் வைட்டமின் சி-யுடன், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான லிக்னைன்கள், ஐசோஃப்ளேவோன்கள் மற்றும் சாப்போனின்கள் அதிக அளவில் உள்ளன. இவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களால் ஏற்படும் கொடிய நோயான புற்றுநோய் உண்டாவதை தடுக்கும்.

செரிமானம் :-

பலாப்பழத்தில் உள்ள ஆன்டி-அல்சர் பொருள், அல்சர் மற்றும் செரிமான பிரச்சனையை போக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலை சரிசெய்யும்.

கண் மற்றும் சருமம் :-

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ என்னும் சக்தி வாய்ந்த சத்து கண்கள் மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. குறிப்பாக பார்வைக் கோளாறு, மாலைக் கண் நோய் உள்ளவர்களுக்கு இந்த பழம் மிகவும் நல்லது.

எனர்ஜியைத் தரக்கூடியது :-

இதில் உள்ள இனிப்பைத் தரக்கூடிய ஃபுருக்டோஸ் மற்றும் சுக்ரோஸ், சுவையை மட்டுமின்றி, உடலில் எனர்ஜியையும் அதிகரிக்கிறது. மேலும் இதில் கொழுப்பு எதுவும் இல்லாததால், இது ஒரு ஆரோக்கியமான பழங்களுள் ஒன்றாக உள்ளது.

உயர் இரத்த அழுத்தம் :-

இப்பழத்தில் உள்ள பொட்டாசியம், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, மாரடைப்பு வருவதை தடுக்கும்.

ஆஸ்துமா :-

ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலாப்பழத்தின் வேர் ஒரு நல்ல நிவாரணத்தைத் தரக்கூடியது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு இப்பழத்தின் வேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை பருகினால், ஆஸ்துமாவானது கட்டுப்படும்.

எலும்புகளை வலுவாக்கும் :-

கால்சியம் சத்தை உடலில் உறிஞ்சுவதற்கு தேவையான மெக்னீசியம், பலாப்பழத்தில் அதிகம் உள்ளது. இதனால் எலும்புகளில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல், எலும்புகள் வலுவோடு இருக்கும்.

இரத்த சோகை :-

பலாப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்து, இரத்த சோகை பிரச்சனை குணமாகும்.

தைராய்டு :-

தைராய்டு சுரப்பியை சீராக இயக்குவதற்கு காப்பர் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் பலாப்பழத்தை சாப்பிட்டால், தைராய்டை சீராக வைக்கலாம்.

இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
இயற்கையோடு ஆரோக்கியமாக வாழ்வோம்..!
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் விழிப்புணர்வு செய்யுங்கள்..!
============================================================
பொது நலனில் அக்கறை கொண்ட உங்கள் கடலூர் அரங்கநாதன்...

Tuesday, June 9, 2015

பணம்....

இரவு 12 மணி
இப்படி ஒரு விபரீதம்
நடக்கப்போகிறது என்ற எந்த பயமும்
இல்லாமல் நாடே நிம்மதியாய்
உறங்கிக்கொண்டு இருக்கிறது,
ஒவ்வொருவருக்கும் காலையில்
கண்விழிக்கும் போது தான் அந்த
விபரீதத்தின் விளைவு தெரியும்,
அது வேறொன்றும் இல்லை
மக்களுக்கு பணத்தின் மீதான மோகம்
அதிகரித்துவிட்டதால் மக்களை
அந்த பைத்தியத்தில் இருந்து
விடுவிக்கும் நோக்கத்திற்காக
இத்தனை வருடங்கள்
நாம் சேர்த்து வைத்த பணமெல்லாம்
இன்று நள்ளிரவு முதல் வெறும்
காகிதங்களாகவே கருதப்படும்,
அவற்றிற்கு எந்த ஒரு மதிப்பும்
கிடையாது,
என்று மத்திய அரசு
அறிவித்துவிட்டது,
தங்கம் மட்டும் எப்போதும் போல்
ஒரு விலைமதிப்புமிக்க
உலோகமாக கருதப்படும்!
இந்த அறிவிப்பு தெரியாமல்
எல்லா மக்களும் கொறட்டை
விட்டு தூங்கிக்கொண்டு
இருக்கிறார்கள்!
வழக்கம் போல் நம் தாய்குலங்கள்
எல்லாம் தலையை சொறிந்தபடி
காலை ஐந்து மணிக்கு காபிபோட
பால்பாக்கெட்டை தேடி
வாசலுக்கு வர காம்பௌன்ட்
கேட்டில் வெறும் பை
மட்டும்தான் தொங்குகிறது
பாலை காணோம்,
பால்காரனுக்கு போனை போட,
இனிமே பணம் சம்பாதித்து என்ன
பண்ணபோறோம் அதான் பால்
போடல,
போய் நியூஸ் பாருங்க என்றதும் tv
யை on பண்ண பொதிகை மட்டும்
தான் வேலை செய்கிறது,
Private channels எல்லாம் மூடப்பட்டு
விட்டன பேப்பர்காரனும்
வரவில்லை,
இந்த தகவல் பரபரப்பாக நாடு
முழுவதும் பரவியது
உறவினர்களுக்கு தகவல் சொல்ல
போனை எடுக்க எந்த போனும்
வேலை செய்யவில்லை
bsnl ம் std booth களும் மட்டும் தான்
வேலை செய்கின்றன,
இனிமேல் பணத்திற்கு மதிப்பு
இல்லையென்றால்
எதைக்கொடுத்து அரிசி பருப்பு
போன்ற அத்தியாவசிய
பொருட்களை வாங்குவது,?!
மக்கள் எல்லோரும்
super market, மளிகை
கடைக்காரனை போய் பார்க்க
எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா
எல்லாத்தையும் எங்க
குடும்பத்துக்காக வச்சிகிட்டோம்,
என்று உணவுப்பொருட்களை
பதுக்கிக்கொண்டார்கள்,
வாங்கி வைத்திருந்த
உணவுப்பொருட்கள் எல்லாம்
கொஞ்ச நாளில் காலியாக விட
நாடுமுழுவதும்
உணவுப்பொருட்களை
தேடி ஓட ஆரம்பித்தார்கள்
IT company கள், தொழிற்சாலைகள்,
சினிமா தியேட்டர்கள்,
போக்குவரத்து நிறுவனங்கள்,
எல்லாம் மூடப்பட்டுவிட்டன
கொஞ்சம் ரயில்களும், அரசு
பஸ்களும் மட்டும் இயங்குகின்றன,
அரசு ஊழியர்கள் எல்லோருக்கும்
மாதம் 25 கிலோ அரிசியும், 10
கிலோ கோதுமையும் சம்பளமாக
வழங்கப்பட்டது
பெட்ரோல் பங்க்குகளில் ஒரு
கிராம் தங்கத்திற்கு
10 லிட்டர் பெட்ரோல் தரப்பட்டது,
எல்லோரும் சைக்கிள் பயன்படுத்த
ஆரம்பித்தார்கள்
ரயில் மற்றும் பஸ்ஸில் பயணம்
செய்வோரிடமும்
மின்சாரம் மற்றும் டெலிபோன்
பயன்படுத்துவோரிடமும்
மாதக்கட்டணமாக தங்கம்
பெறப்பட்டது,
நகரம் முழுவதும் ரிக்சா, குதிரை
வண்டி, மாட்டுவண்டி போன்றவை
புழக்கத்திற்கு வந்தது,
நாடே போர்க்களம்போல் அல்லோலப்
பட்டுக்கொண்டு இருக்க
விவசாயிகள் மட்டும் எந்தவித
பதட்டமோ சலனமோ இன்றி
எப்போதும் போல் கோழி
கூவியதும் கலப்பையுடன்
உழவுக்கு சென்றுகொண்டு
இருந்தார்கள்!
வாரச்சந்தைகளில்
விவசாயிகளிடம்
அரிசி பருப்பு வாங்க
நகைக்கடை அதிபர்களும் பெரிய
செல்வந்தர்களும் அடகுக்கடை
சேட்டுகளும் தங்கத்தோடு
வரிசையில் நின்றார்கள்,
உணவுப்பொருட்களுக்காக பங்களா
கார் போன்றவை எல்லாம்
விவசாயிகளிடம் விற்கப்பட்டது,
வேலைதேடி எல்லோரும்
கிராமங்களுக்கு செல்ல
மூன்றுவேளை உணவுடன்
மாதந்தோறும் குடும்பத்திற்கு
தேவையான உணவுப்பொருட்கள்
சம்பளமாக வழங்கப்பட்டது
ஒட்டுமொத்த தனியார்
கல்விநிறுவனங்கள் எல்லாம்
மூடப்பட்டு அரசு பள்ளிகளும்
கல்லூரிகளும் மட்டுமே இயங்கின,
Bank கள் எல்லாம் ஆடுமாடுகள் கட்ட
பயன்படுத்தப்பட்டன,
வெளிநாடுகளில் இருந்து
பெட்ரோல் வாங்க மட்டுமே தங்கம்
பயன்படுத்தப்பட்டது அரசுக்கு
தங்கம் பற்றாக்குறையாகும்
போதெல்லாம் விவசாயிகளிடம்
கடனாக பெற்றார்கள், விவசாய
குடும்பத்தை சேர்ந்த பெண்கள்
எல்லாம் கிலோ கணக்கில் நகை
அணிய ஆரம்பித்தார்கள், கார்,
பங்களா, சுற்றுலா, என ஆடம்பர
வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள்,
நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும்
அரை ஏக்கர் விவசாய நிலம்
வாங்குவதே வாழ்நாள்
லட்சியமாக மாறிப்போனது
வாகனங்களால் ஏற்படுத்தப்பட்டு
காற்றை அசுத்தப்படுத்திய
புகைமண்டலம் நாளாக நாளாக
குறைய
உலக வெப்பமயமாதல் குறைந்து
பருவமழை தவறாமல்
பெய்யத்துவங்கியது
வறண்டபூமியெல்லாம் தவறாது
மழை பெய்ததினால் விவசாய
நிலங்களாக மாறின,
ஒவ்வொரு குடும்பத்திற்கும்
தேவையான உணவுப்பொருட்கள்
போதுமான அளவு கிடைத்ததால்
மீதி இருந்த உணவுப்பொருட்கள்
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி
செய்யப்பட்டு போதுமான
மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்ட
ன!
பணத்தின் மீதான மோகம் காணாமல்
போனதாலும்,
tv, mobile, internet, போன்றவைகளை
இழந்ததாலும்
உறவுகளின் வலிமை
புரியத்தொடங்கியது
அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, என
ஒவ்வொருவரின்
முக்கியத்துவமும் தெரிய
ஆரம்பித்தது,
பக்கத்து வீட்டின் சுக துக்கங்கள்
நம்மையும் பாதிக்க
தொடங்கியது,
பணம் எனும் மாயவலையில்
சிக்கியிருந்த நாமெல்லாம்
இயந்திரங்கள் இல்லை,
மனிதர்கள் எனும் உணர்வுகள்
நிறைந்த உன்னதப்பிறவிகள் என்பது
புரிய ஆரம்பித்தது,
எல்லாம் இருந்தும்
எந்தவித பொழுதுபோக்கும்
இல்லாமல் இருந்த
மக்களை மகிழ்விப்பதற்காக
ரஜினி, கமல்,
அஜித், விஜய் எல்லாம் கிராமங்கள்
தோறும் நாடகம் நடத்தி அரிசி
பருப்பு வாங்கிச்சென்றார்கள்
திருவிழா காலங்களில் த்ரிஷா
நயன்தாராவின் கரகாட்டத்திற்கு
மிகுந்த வரவேற்பு கிடைத்தது
ஆனாலும் அவர்களால்
நமிதாவிடமும்
அனுஷ்காவிடமும் போட்டிபோட
முடியவில்லை
என்பது வருந்தத்தக்க செய்தி!
காரணம் தேடி விசாரித்ததில் பல
திடுக்கிடும் தகவல்கள்
தெரியவந்துள்ளது
அவற்றை வெளியிட எப்போதும்
போல் சென்ஸார் போர்டு அனுமதி
மறுத்துவிட்டது!
அதனால்,
தயவு செய்து கரகாட்டத்தையும்
குறட்டையையும்
நிறுத்திவிட்டு
கொஞ்சம் கண்விழித்து பாருங்கள்
இது கனவுதான்!
ஆனால் எல்லா கனவுகளும்
சந்தோஷத்தை மட்டுமே
தருவதில்லை
சில கனவுகள்
நம் தூக்கத்தையே கலைக்கும்
சக்திகொண்டவை
இந்த கனவும் அப்படித்தான
கல்லுக்குள் ஒளிந்திருக்கும்
கடவுள் போல்தான்
காசும் காகிதத்திற்குள்
ஒளிந்திருக்கிறது,
கடவுளை கல்லென்று வாதிக்கும்
மேதாவிகள் கூட, காசை காகிதம்
என்று ஒப்புக்கொள்ளவதில்லை
காரணம் பணம் என்பது எந்த
மனதையும் மண்ணாக்கும்
மாயப்பேய்!
பணம் நம்மிடம் அடிமைப்பட்டு
இருக்கவேண்டுமே ஒழிய
பணத்திற்கு நாம்
அடிமையாகக்கூடாது —