Saturday, March 30, 2013

தெரிந்து கொள்வோமா-69 [மடி கணினியின் மின் கல பராமரிப்பு]


மடிக்கணனிகளில் பாவிக்கப்படும் மின்கலங்கள்(பேட்டரிகள்) விரைவில் பழுதடையக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.

இதற்கு தொடர்ச்சியாக மின்கலங்களை சார்ஜ் செய்தநிலையில் மடிக்கணனியைப் பயன்படுத்துதல் மற்றும் சரியான முறையில் சார்ஜ் செய்யாதிருத்தல் போன்றன காரணங்களாக அமைகின்றன.

எனவே இவற்றை தவிர்த்து நேரத்திற்கு நேரம் மின்கலம் தொடர்பான தகவல்களைத் தந்து அவற்றின் பாவனைக் காலத்தை நீடிக்க செய்யும் பொருட்டு Battery Optimizer எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.

விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளானது மடிக்கணனியின் மின்கலம் முழுமையாக சார்ச் அடைந்த பின்னரும், சார்ச் அற்ற நிலையிலும் அலாரம் மூலம் எடுத்துக்காட்டுவதுடன் மின்கலங்களில் காணப்படக்கூடிய ஏனைய கோளாறுகள் தொடர்பான தகவல்களையும் உடனுக்குடன் தரக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தரவிறக்கச்சுட்டி:
http://downloads.reviversoft.com/BatteryOptimizerSetup.exe

தெரிந்து கொள்வோமா-70 [உலகின் மிகத் தொண்மையான மற்றும் ஆழமான ஏரி]


Lake Baikal, Siberia

Situated in south-east Siberia, the 3.15-million-ha Lake Baikal is the oldest (25 million years) and deepest (1,700 m) lake in the world. It contains 20% of the world's total unfrozen freshwater reserve. Known as the 'Galapagos of Russia', its age and isolation have produced one of the world's richest and most unusual freshwater faunas, which is of exceptional value to evolutionary science.

தெரிந்து கொள்வோமா-68 [மூச்சு திணறல் உண்டானால்]

மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவி !!

மூச்சுத் திணறல் ஏற்பட்டவர்களுக்கு ‘ஹெய்ம்லீக் மேன்யூவர்’ என்னும் முதல் உதவியைச் செய்ய வேண்டும்.மூச்சுத் திணறலுக்கு ஆளானவரின் பின்பக்கமாக நின்று அவரது விலா எலும்புகளுக்குக் கீழாக, அதாவது வயிற்றின் மத்தியில் இரண்டு கைகளாலும் உள்நோக்கி அழுத்தியவாறு மேலே தூக்கவேண்டும்.

இப்படிச் சில முறைகள் செய்ய வேண்டும். இதனால், வயிற்றுப் பகுதியில் இருந்து கிளம்பும் வாயு, தொண்டையில் சிக்கியுள்ள உணவை வாய் வழியாக வெளியேத் தள்ளிவிடும். அந்நிலையிலேயே அவரைத் தூக்க முயற்சிப்பதுபோலச் செய்ய வேண்டும். அப்போது சுவாசப் பாதையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் நிவாரணம் கிடைக்கும்.

ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால்?

குழந்தைகள் காசு, பட்டாணி என்று கண்டதையும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும். குழந்தைகளின் உணவுக் குழாய், மூச்சுக் குழாய் இரண்டுமே மிகவும் குறுகிய விட்டத்தில் இருக்கும். இதனால், இந்த மாதிரியான பொருட்கள் மிக எளிதாக மூச்சுக் குழாயை அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

குழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால் பாதிக்கப்பட்ட குழந்தையை முன்பக்கம் குனியவைத்து ஒரு கையால் தாங்கியபடி, ஒரு தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில் உள்ளங்கையின் அடிப்பாகத்தால் ஓங்கித் தட்ட வேண்டும்.

இப்படிச் சில முறைகள் தட்டினால் தொண்டையில் சிக்கியுள்ள பொருள் வாய் வழியாக வெளியேவந்துவிடும்.பொதுவாக மூச்சுத்திணறலில் அவதிப்படுபவர்களுக்குக் குடிப்பதற்கு எதுவும் கொடுக்கக் கூடாது. இது தொந்தரவை அதிகப்படுத்தும்.

நன்றி
சிவா

தன்னம்பிக்கை, மன உறுதி, விடா முயற்சி-3 (வியட்நாம், ஹோ சி மின்)


யார் இந்த ஹோ சி மின் ?? படித்து உங்கள் பிள்ளைகளுக்கு கட்டாயம் சொல்ல மறவாதீர்கள் !!

பிரான்சு நாட்டிடமும் பின்னர் ஜப்பானிடமும் அடிமைப்பட்டுக்கிடந்த வியட்நாமை அடிமைத் தளையிலிருந்து போராடி விடுவித்த மகத்தான தலைவர் ஹோசிமின். இங்கேயுள்ள படத்தில் சோனியாகக் காட்சிதரும் இந்த எளிய மனிதருக்கு வாய்ச்சிருந்தது இரும்பு இதயமுங்க. ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே தண்ணிகாட்டி, ‌அதோட மூக்கை உடைச்சவரு இவருன்னா நம்புவீங்களா? விரிவாச் சொல்றேன், கேளுங்க...

தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடாதீர்கள்.... இந்த வாக்கியம் நம்மில் பலருக்கும் தெரியும் ஆராம்பத்தில் எதிரிகளால் இப்படி தவறாக மதிப்பிட பட்ட பலர் பின்னாட்களில் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார்கள்.

இவர் 1890ம் ஆண்டு தன் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வெச்ச பேரு சிங்சுங். அப்ப... ‘ஹோசிமின்’ அப்படிங்கற பேர் எப்படி வந்‌துச்சுன்னு யோசிக்கறீங்களா? ‘‌ஹோசிமின்’ என்ற பெயருக்கு ‘ஒளி தந்தவர்’ என்பது பொருள். இருண்டு கிடந்த வியட்நாம் நாட்டுக்கு ஒளி தந்தவர்ங்கறதால மக்கள் வெச்ச பேரு அது. அதுவே நிலைச்சுடுச்சுன்னா எந்த அளவுக்கு மக்கள் தலைவரா இருந்திருப்பாருன்னு பாத்துக்கங்க.

வியட்நாம், 1911 ஆம் ஆண்டின் ஒரு நள்ளிரவு. நிகே அன் பிராந்தியத்தின் சின்னஞ்சிறு விவசாய கிராமமான கிம்லியன் தூங்கிக்கொண்டிருந்தது. இந்தோ சீன பகுதியை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்திருந்த நேரம் அது.

பிரெஞ்சு போலீஸ் லாரி ஒன்று புழுதியை கிள்ளப்பிக்கொண்டு ஊருக்குள் நுழைந்து ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. அந்த வீட்டின் உரிமையாளரான ஆசிரியரையும் அவரின் மொத்த குடும்பத்தையும் லாரிக்குள் அள்ளி வீசியது. பிரெஞ்சு அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்பது அந்த ஆசிரயர் மீதான குற்றச்சாட்டு. கடைசியாக அந்த ஆசிரியரின் ஒரு மகன் மட்டும் லாரிக்கு வெளியில் நின்று கொண்டிருந்தான். உயராமாக மிகவும் மெலிந்து காணப்பட்ட பரிதாபத்திற்குரிய தோற்றம் கொண்ட சிறுவன் அவன்.

" தானே சாவப்போற புழுவை நாம ஏண்டா அடிச்சு கொல்லனும், இவனை ஏத்த உள்ள வேற இடம் இல்லை" என்று ஏளனம் செய்து விட்டு போலீசார் லாரியில் ஏறிக்கொண்டு ஊரை விட்டு வெளியேறி இருளில் மறைந்தனர். அந்த சிறுவன் அத்தோடு அவன் குடும்பத்தை மீண்டும் காணவில்லை.

கப்பல் ஒன்றில் உதவியாளனாக சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறினான். தன தாய் நாட்டின் நலனை குறித்தும் தன்னை போலவே பலர் தொலைத்துவிட்ட குடும்பங்களை குறித்தும் சிந்திக்கலானான்.

அன்று தவறுதலாக மதிப்பிடபட்ட அந்த சிறுவன் தான் பின்னாளில் பிரெஞ்சு படைகளையும் பின்பு ஜப்பானிய படைகளையும் எதிர்கொண்டு வியட்நாமில் மன்னர் குடும்பத்தை துரத்தியடித்துவிட்டு மக்கள் ஆட்சியை நிறுவிய ஹோ சி மின்.

இத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை அவனின் போராட்டம். இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த காலம் அது. துரத்தி அடிக்கப்பட்ட மன்னன் பிரெஞ்சு, பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறையிட இங்கிலாந்து அரச குடும்பம் இந்த விவகாரத்தை புதிய வல்லரசான அமெரிக்காவிடம் கையளித்தது.

பிரான்ஸ் தனக்கு தோதானவங்களை வியட்நாம் அரசுல அமர்த்திட்டு அவங்களை வெச்சு பொம்மலாட்ட அரசியல் நடத்திட்டிருந்துச்சு. அதை எதிர்த்துப் போரிட்ட கொரில்லாப் படைக்கு தகவல்களைக் கொண்டு சேக்கற வேலையத்தான் சிறுவனா இருந்தப்ப ஹோசிமின் செஞ்சாரு. உயிருக்கே ஆபத்தான இந்த வேலையச் செய்யறப்பவே நாட்டு விடுதலைககாக ஏதாச்சும் செய்யணும்ங்‌கற அழுத்தமான விதை இவர் மனசுல விழுந்துருச்சுங்க. இளைஞனானதும் அவர் பிரான்ஸை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினாரு. பிரான்ஸ் அரசாங்கத்தோட சர்வ வல்லமைக்கு முன்னால ஒண்ணும் வேலைக்காவலை. சரின்னு பிரான்ஸுக்கே போய், பாரீஸ்ல ஒரு தபால் நிலையத்துல வேலை பாத்துக்கிட்டே பிரெஞ்சுப் புரட்சிய எப்படி சாதிச்சாங்கன்றதுல இருந்து பல தகவல்களை சேகரிசசுக்கிட்டாரு.

வியட்நாமுக்கு அவர் திரும்ப வந்தப்ப... 1940ம் ஆண்டு. அப்ப பிரான்ஸ் கிட்ட இருந்து வியட்நாமை ஜப்பான் கைப்பற்றிச்சு. பிரான்ஸோட கொடுமைல இருந்து விடுபட்டாச் சரின்னுட்டு வியட்நாம் மக்கள் ஜப்பானியர்களுக்கு வரவேற்பு த்நதாங்க. ‘‘எந்த நாட்டின் ஆதிக்கத்தோட கீழ இருந்தாலும் அடிமைங்க அடிமைங்க தானே... அதனால இவங்களை விரட்டியடிச்சு நாம சுதந்திர நாடாகணும்’’ அப்படின்னு மக்கள்கிட்ட முழங்கி, எழுச்சியை உண்டுபண்ண முயன்றாருங்க ஹோசிமின். இதை வேடிக்கை பாத்துட்டிருக்க ஜப்பான் அரசு என்ன இனா வானாக்களா? இவரை நசுககிடலாம்னு முனைஞ்சது. வியட்நாமில் இருந்த அடர்ந்த காடுகள் ஹோசிமினுக்குப் புகலிடம் தந்து காப்பாற்றின. அந்தக் காட்டுக்குள்ள இருந்துக்கிட்டே அவர் ஒரு கொரில்லாப் படையை உருவாக்கினாரு. (நோ... நோ... காட்ல இருந்த கொரில்லாக் குரங்குகளை வெச்சு இல்ல... மறைஞ்சிருந்து எதிர்பாராம தாக்குதல் நடத்துறவங்களுக்கு கொரில்லாப் படைன்னு பேரு.) அந்த கொரில்லாப் படைக்குப் பயிற்சி கொடுத்து தகுந்த சந்தர்ப்பத்துக்காக கொக்கு மாதிரி காத்திருந்தார்.

1945ம் வருஷத்துல ஜப்பான் மீது குண்டுகள் வீசப்பட்டு, அது கலகலத்துப் போயிருந்த சமயம்... பிரான்ஸ் வியட்நாமைக் கைப்பற்றுவதற்கு முன்னால தன் கொரில்லாப் படையோட ஹோசிமின் ஜப்பானியர்களை விரட்டியடிச்சு, நாட்டைக் கைப்பத்திட்டாரு. சின்ன வயசுலருந்து அவர் வெச்சிருந்த ஆசை நிறைவேறிட்ட சந்தோஷத்தோட வியட்நாம் சுதந்திர நாடாயிட்டதா உலகத்துக்கு பறை சாற்றினாரு. கையோட தேர்தலையும் நடத்த... அவர் கட்சி ஜெயிச்சு நாட்டுக்கு அவர் தலைவரானாரு. பிரான்ஸ் கொஞ்சம் லேட்டா சுதாரிச்சுக்கிட்டு யுத்தத்துக்கு படைதிரட்டி வந்துச்சு. வியட்நாமில யுத்தம் ஆரம்பிச்சது.

போர்க் கப்பல்கள், விமானங்கள், பீரங்கிகள்னு இப்படி சகல ஆயுத வசதிகளோடயும் இருந்த பிரான்ஸை போதிய ஆயுத வசதிகள் இல்லாத ஹோசிமின், ‘‘எங்கள்ட்ட வாலாட்டினா கடைசில தோக்கறது நீங்களாதான் இருப்பீங்க’’ன்னு எச்சரிச்சாரு. ‘ஹா... ஹா... நல்லாவே ஜோககடிக்கிறாரு இவரு’ன்னு சிரிச்சுக்கிட்டே வந்த பிரான்ஸ், ஐம்பத்தைந்து நாட்கள் நடந்த போரில, காட்டில் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டிருந்த ஹோசிமின் படைகளை எதிர்கொள்ள முடியாம மண்ணைக் கவ்வுச்சு. பிரான்ஸ் இப்படி தோல்வியைச் சந்திச்சாலும் தெற்கு வியட்நாம் அதோட கட்டுப்பாட்டிலதான் இருந்து்ச்சு. வடக்கு்ப் பகுதி மட்டும்தான் ஹோசிமின் வசம். ‘என் நாட்டை முழுமையா மீட்டே தீருவேன்’ன்னாரு ஹோசிமின்.

பிரான்ஸ், ஹோசிமினை ஒரு கம்யூனிஸ்ட்னு சொல்லி அமெரிக்கா கிட்ட உதவி கேட்டுச்சு. கட்டப் பஞ்சாயத்துன்னா குஷியாகற, கம்யூனிஸ்ட்ன்னாலே பிடிககாத அமெரிக்கா பிரான்ஸுக்கு ஆயுத உதவி பண்ணிச்சு. வியட்நாம் பூரா குண்டு மழை, துப்பாககி சத்தம்தான். பல ஆண்டுகள் ஹோசிமின் படை பிரான்ஸுக்கு தண்ணி காட்ட, அந்த கேப்ல அமெரிக்கால மூணு ஜனாதிபதிகளே பதவி மாறிட்டாங்கன்னா பாத்துக்குங்களேன். ‘சரி, இதெல்லாம் வேலைக்காவாது’ன்னு முடிவுகட்டி அமெரிக்காவே 1965ம் ஆண்டு நேரடியா போர்ல இறங்கிச்சு. அங்க புடிச்சது அமெரிக்காவுக்கு சனி. அதுவரைக்கும் தோல்வியே காணாத அமெரிக்காவோட மூக்கை உடைச்சாரு ஹோசிமின்.

எப்படிங்கறீங்களா...? அமெரிக்கப் படைங்க இரக்கமே இல்லாம வடக்கு வியட்நாம் மேல மானாவாரியா குண்டு வீசித் தாக்க ஆரம்பிச்சது. நிறைய கொரில்லா வீரர்களை வீழ்த்தியதா கொக்கரிச்சது. உண்மையில கொரிலாக்களால நிறைய அமெரிக்க வீரர்கள் இறந்ததையும், பலர் துண்டைக் காணோம், துணியக் காணோம்னு ஓடினதையும் அமெரிக்கா மறைச்சுட்டது. ‘சமாதானமாப் போயிடலாமே. வடக்கு வியட்நாமை மட்டும் நீ வெச்சுக்கோ’ன்னு ஹோசிமினுக்கு தூது விட்டுச்சு. ‘சுதந்திர நாடே என் லட்சியம்’னு உறுதியா முழங்கினாரு ஹோசிமின்.

1968ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தெற்கு வியட்நாம்ல முகாமி்ட்டிருந்த அமெரிக்கப் படைகள் புத்தாண்டுக் கொண்டாட்டத்துல இருந்த சமயம், சாதாரண மக்கள் போல ஊடுருவியிருந்த ஹோசிமினோட படைகள் திடீர்னு வெறித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டாங்க. அமெரிக்க தூதரக அலுவலகம் உட்பட கொரில்லாப் படையினர் கைப்பற்றிட்டாங்க. இந்த அவமானத்தையும் மூக்குடைப்பையும் சகிச்சுக்க முடியாத அமெரிக்கா, கட்டுப்பாடில்லாத வன்முறையக் கட்டவிழ்த்து விட்டுச்சு. கம்யூனிஸ்ட்னு சந்தேகப்படற அப்பாவி பொதுஜனங்களைக் கூட கேள்விமுறையில்லாம சுட்டுத் தள்ளினாங்க. வயசானவங்க, குழந்தைங்கன்னு எந்த இரக்கமும் பார்க்கல. அவ்வளவுதான்... அது‌வரைக்கும் ‌ஹோசிமினோட கொரில்லாப் படைகள்தான் போராடிக்கிட்டிருந்துச்சு. இப்ப பொதுமக்கள்லருந்து புத்தபிட்சுக்கள் கூட போராட ஆரம்பிச்சாங்க. ஒரு சின்ன கதறலோ, சத்தமோ இல்லாம புத்தபிட்சுக்கள் நடுரோட்ல தங்களைத் தாங்களே எரிச்சுககிட்டாங்க. இதையெல்லாம் டி.வி.யில பாத்த அமெரிக்க ஜனங்களே, தங்கள் அரசை குறை சொல்ல ஆரம்பிச்சாங்க.

அப்ப எலக்ஷன் டயம்ங்கறதால ‘வியட்நாம்லருந்து படைகளை விலக்கிக் கொள்வேன்’னு உறுதிமொழி தந்து ஜனாதிபதியானாரு நிக்ஸன். (பி்னனால வாட்டர்கேட் ஊழல்ல பேர் நாறின அதே ஆசாமிதாங்க). படைகளை விலக்கிக்கற மாதிரி பாவ்லா காட்டிக்கிட்டே, வியட்நாம் மேல தாக்குதலை தீவிரமாக்கி டபுள் கேம் ஆடினாரு அந்த பாவி மனுஷன்! ஏதோ உலகப் போர் ரேஞ்க்கு விமானங்கள் குண்டு மழை பொழிய... இடைவிடாத யுத்த பூமியாகவே தொடர்ந்தது வியட்நாம். இந்த நிலையிலதான் ஒரு பெரிய திருப்பம் வந்துச்சுங்க. 1972 மார்ச் மாசத்துல ‘நேப்பாம்’ங்கற கொடூரமான குண்டை அமெரிக்கா வீச, ஒரு வியட்நாமிய கிராமமே பத்தி எரிஞ்சுச்சு. அதுல தன் உறவுகளை இழந்த ஒரு சிறுமி, ஆடைகளை கழற்றிட்டு நிர்வாணமா கதறிக்கிட்டு ஓடி வந்த காட்சியும் அந்தச் சிறமியின் கதறலும் பாத்தவங்க அத்தனை பேர் மனசையும் உலுக்கிச்சு. (உலகப்புகழ் பெற்ற அந்தப் படம் இங்கே). அமெரிக்காவுலயே ஜனங்கள்ட்டருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்த அதேசமயம் உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவைக் கண்டிச்சுக் குரல் கொடுத்து பாய ஆரம்பிச்சுச்சு.

கடைசியில வேற வழியே இல்லாம எல்லாத் துருப்புகளையும் வாபஸ் வாங்கிக்கிட்டாரு அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன். வட வியட்நாம், தென் வியட்நாமோட இணைச்சு ஒரே சுதந்திர நாடாக மாறிச்சு. ஆனா விதியோட ‌கொடுமையான விளையாட்டு என்னன்னா... இதைப் பாக்கறதுக்கு ஹோசிமின் உயிரோட இல்ல. அதற்கு முன்னாலேயே இறந்து விட்டிருந்தார். அவர் இறந்தாலும் அவரோட புகழ் இறக்கலை. வெற்றிக்கு அருகாமை வரை தங்களை வழிநடத்தின அந்தத் தலைவனை மறக்காத வியட்நாம் மக்கள் ஒரு்ங்கிணைந்த வியட்நாமின் தலைநகரான சைகோனுக்கு ‘ஹோசிமி்ன் சிட்டி’ன்னு பேர் வெச்சு கெளரவப்படு்த்தினாங்க. ஹோசிமினோட மனஉறுதியும், தைரியமும், தன்னம்பிக்கையும் சாதிச்ச வெற்றி அது. இந்த மூணும் நம்மகி்ட்ட இருந்தா, நாமகூட சாதிக்கலாமுங்க!

அமெரிக்கா தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற திமிருடன் வரைபடத்தில் தென் வியட்நாம் என்ற புதிய நாட்டை உருவாக்கியது. அதற்கு தலைவனாக அந்த மன்னனை அமர்த்தியது துணைக்கு தன் பெரும் இராணுவத்தை அனுப்பியது. குழந்தையாக தவழ்ந்து கொண்டிருந்த வியட்நாம் பயந்துவிடவில்லை. ஹோ சி மின் தலைமையில் மக்கள் அணி திரண்டனர். அமெரிக்கா ஆக்கிரிமிப்பில் இருந்த தென் வியாட்நாமில் மக்கள் கெரில்லா போராளிகளாக மாறினர்.

பகலில் வயலில் வேலை செய்யும் விவசாயி இரவில் ஆயுதம் ஏந்தினான், பகலில் பிள்ளைக்கு பால் கொடுத்த தாய் இரவில் வெடிகுண்டுகளோடு அமேரிக்க இராணுவத்தோடு போரிட்டால். உலகையே திரும்பிப்பார்க்க வைத்தது வியட்நாம் போர்.

போரின் போது வியட்நாமில் சுமார் 8 மில்லியன் டன் வெடிகுண்டுகளை வீசியது அமெரிக்கா இது ஒட்டு மொத்தமாக இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டுகளை விட மூன்று மடங்கு அதிகமாகம்.

அன்றைய வியட்நாமின் மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 300 டன் வெடி குண்டுகள் அமெரிக்காவால் வீசப்பட்டுள்ளது ]

அன்று ஏளனமாக எண்ணப்பட்ட அந்த சிறுவன் தான் யாராலும் தோற்கடிக்க முடியாது என்று மார்தட்டிக்கொண்ட (இன்றும் மார்தட்டிக் கொண்டிருக்கிற)

அமெரிகக படைகளை மண்ணை கவ்வ செய்தவன். பெரும் சேதங்களுடன் அமெரிக்கா போரில் தோற்று வெளியேறியது. வியட்நாம் ஒரே நாடாக உலக வரைபடத்தில் இன்று கம்பீரமாய் காட்சியளிக்கிறது.

தெற்கு வியட்நாமின் தலைநகராக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட "சைகான்" அந்த சிறுவனின் பெயரை எடுத்துக்கொண்டது வரைபடத்தில் "ஹோ சி மின்" நகரம் ஆனது.

Wednesday, March 27, 2013

தெரிந்து கொள்வோமா-67 [தனியே இருக்கும் போது மாரடைப்பு வந்தால்...]


முக்கிய செய்தி ..

மாரடைப்பை தவிர்க்க ..

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ??

மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் .
அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் ,
உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் !
உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..
பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..
இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..

தெரிந்து கொள்வோமா-66 [விதை குண்டு]


Make Forests, Not War -- Innovative design of "Seed Bombs" .

Tuesday, March 26, 2013

தெரிந்து கொள்வோமா-65 [ஆற்று வாய்க்கால் மேலே சூரிய மின் சக்தி தகடுகள் {ஒரே கல்லுல ரெண்டு மாங்கா}]


Now, Gujarat to cover Narmada canals with solar panels!


Canal solar power: Gujarat has attracted investments of Rs 9,000 crore so far on solar energy projects.


GANDHINAGAR, APRIL 23:


Close on heels of commencing use of wastelands in northern districts and rooftops in towns and cities, Gujarat is set to potentially use the existing 19,000 km-long network of Narmada canals across the State for setting up solar panels to generate power.

The Chief Minister, Mr Narendra Modi, will inaugurate the first of a series of this project, known as Canal Solar Power Project, when he launches a 1 megawatt (mw) pilot project, which is already commissioned, on Narmada branch canal near Chandrasan village of Kadi taluka in Mehsana district on Tuesday.

Last week, he inaugurated a 600-MW solar power project spread across 11 districts. This included a 214MW Solar Power Park, the largest such generation centre at a single location in Asia. Also, Azure Power, leading independent power producer in solar sector, announced a 2.5 MW rooftops project in Gandhinagar.

Gujarat, which invests nearly Rs 2,000 crore an year on renewable energy, has attracted investments of Rs 9,000 crore so far on solar energy projects.

The pilot project has been developed on a 750-m stretch of the canal by Gujarat State Electricity Corporation (GSECL) with support from Sardar Sarovar Narmada Nigam Ltd (SSNNL), which owns and maintains the canal network.
ENERGY, WATER SECURITY

The pilot project will generate 16 lakh units of clean energy per annum and also prevent evaporation of 90 lakh litres of water annually from the canal, an official told Business Line here on Monday. The concept will, therefore, tackle two of the challenges simultaneously by providing energy and water security.

The cost of per megawatt of solar power, in this case, is likely to be much less than the estimated Rs 10-11 crore, as the two banks of the canal will be used to cover the canal by installing solar power panel and the government will not have to spend much on creating basic infrastructure, including land acquisition .

Today, Gujarat has about 458 km of open Main Canal, while the total canal length, including sub-branches, is about 19,000 km at present.

When completed, the SSNNL's canal network will be about 85,000 km long.

Assuming a utilisation of only 10 per cent of the existing canal network of 19,000 km, it is estimated that 2,200 MW of solar power generating capacity can be installed by covering the canals with solar panels.

This also implies that 11,000 acres of land can be potentially conserved along with about 2,000 crore litres of water saved per annum.

நன்றி: http://www.thehindubusinessline.com

தெரிந்து கொள்வோமா-64 [முகப்பருக்களை கலைவது எப்படி...]


"How to we get rid of blackheads and whiteheads"

Maintaining a clear and beautiful skin, takes time, consistency and effort. Dermatologist may recommend lots of products, but some of them can be expensive and may actually take a long time to work. You can, however, incorporate some home remedies for blackheads and whiteheads into your daily beauty regimen and in a few weeks, you will experience a drastic reduction or even total elimination of the problem.

● Toothpaste – Toothpaste is an effective blackhead and whitehead remover. Apply a thin paste to your infected areas and let it sit on your face for at least 25 minutes. You will probably feel a burning sensation when you apply the toothpaste, but this is normal and will pass. Once you remove the toothpaste, the top of your blackheads and whiteheads will disappear, but you still need to thoroughly wash your face to remove the buildup underneath. Repeat this home remedy every other day for two weeks.

● Tomato – Tomatoes have natural antiseptic properties that dry up whiteheads and blackheads. Peel and mash a small tomato. Apply the tomato pulp to your blackheads and whiteheads before going to bed. Leave the tomato pulp on your face while you sleep and then wash your face in warm water in the morning.

● Lemon -Wash your face in warm water. Then, squeeze the juice of one lemon into a bowl. Add in a pinch of salt and stir the mixture. Apply the mixture to your blackheads and whiteheads. Leave the mixture on for approximately 20 minutes and then wash your face with warm water again.

● Lime – You can also use equal parts of lime juice and cinnamon powder and apply this mixture to blackheads. Leave it on overnight and rinse it off in the morning

● Cornstarch – Mix about a three-to-one cornstarch to vinegar ratio into a paste. Apply it to your problem areas and let sit for 15 to 30 minutes. Remove the paste with warm water and a washcloth.

● Yogurt - Mix three tablespoons of plain yogurt with two tablespoons of oatmeal. Add one teaspoon of olive oil and one tablespoon of lemon juice to the mixture. Stir the mixture thoroughly and apply it to the effective area of the face. Let the mixture sit for five to seven minutes then rinse off with cold water.

● Almond or oatmeal – Mix either oatmeal or almond powder with just enough rose water to make a spreadable paste. Apply it to your problem areas with your fingertips first and then apply it to the rest of your face. Let it set for about 15 minutes and then rinse your face with cold water.

● Rice – Soak rice in milk for 5 hours and then grind this in a blender until it is paste-like in consistency. Use the paste as a scrub on affected areas of the body.

● Potatoes – Grate raw potatoes and then rub the area with the mixture. Wash it off after 15 minutes.

● Fenugreek leaves – Crush some fenugreek leaves and mix with water to form a paste. Put this on the face for 15 minutes and then remove it. Do this every night to keep your face free of blackheads.

● Coriander leaves – Mix some coriander leaves and a little turmeric powder with water and form a paste. Use this as a mask to eliminate blackheads.

● Oatmeal -Grind oatmeal into a powder in a blender and then add some rose water. Use this on affected areas for 15 minutes and then wash it off with cold water.

● Baking soda – Prepare a mixture of equal parts of baking soda and water and rub it onto your face or other body areas prone to blackheads. Leave it on for 15 minutes and then rinse it off with warm water.

● Honey is also good for removing blackheads. Spread honey on the affected area and remove it after 15 minutes.

Remember – Be gentle to your skin. Never pinch, scrape, poke, press, or squeeze too hard!


நன்றி: http://osmeb.blogspot.com

Monday, March 25, 2013

தெரிந்து கொள்வோமா-63 [குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படும் டயாபர்களால் ஆபத்து...]


குழந்தைகளுக்கான டயாபர் உபயோகிப்பதினால் கெடுதிகள் அதிகம்! மருத்துவர்கள் அறிவிப்பு!!

குழந்தை பிறந்த உடனே சில நாட்களிலேயே அவர்களுக்கு டயாபர்களை மாட்டி விடுகின்றனர். அடிக்கடி சிறுநீர், மலம் கழிப்பதால் குழந்தையின் பெட், துணி போன்றவைகளை துவைக்க சிரமப்படும்பெற்றோர்கள் டயாபர்களை மாட்டிவிட்டு பின்னர் தூக்கி எறிந்து விடுகின்றனர். இந்த டயாபர்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, சுற்றுச் சூழலும் மாசடைகிறது. எனவே குழந்தைகளுக்குடயாபர் உபயோகிக்கும் பெற்றோர்கள் அதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி தெரிந்து கொண்டு உபயோகிக்க வேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தைகளுக்கு துணியினாலான, 'டயாபர்'களே பயன்படுத்தப்பட்டன. பின்னர், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும், 'டயாபர்'கள் வரத் துவங்கின. இதன்பிரபலத்தால், துணி, 'டயாபர்'களின் பயன்பாடு, படிப்படியாக குறைந்து விட்டது.

சரும நோய்கள்:
'டிஸ்போசபிள்' டயாபர்களால், குழந்தைகளுக்கு ரேஷஸ் எனப்படும் புண்கள், பின்பகுதியில் உராய்வு உட்பட சில பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதனால், குழந்தைகள் மிகவும் அவதிக்கு ஆளாகின்றனர்.

தூக்கி எறியப்படும் டயாபர்களில் உள்ள டயாக்ஸின் என்னும் ரசாயனம் ப்ளீச் செய்யும் போது உபயோகப்படுத்தப்படுகிறது. இது புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனத்துடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டதை அடுத்து அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இதனை உபயோகிக்க தடை விதித்துள்ளன.

ஹார்மோன் பிரச்சினை:
டிஸ்போசபில் டயாபர்களில் டிரிபுயூடில்-டின் ( TBT) கூட்டுப் பொருட்கள் உள்ளன. இதனை உபயோகிப்பதால் மனிதர்களுக்கு ஹார்மோன் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உபயோகித்த பின்னர் தூக்கிஎறியப்படுவதால் மண்ணில் மட்கிப்போகாமல் அதை உண்ணும் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், துணி 'டயாபர்'களால், பல்வேறு நன்மைகள் உள்ளன. துணி டயாபர்கள் பயன்படுத்தினால்,குழந்தைகளுக்குரேஷஸ் போன்றவை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு:
டிஸ்போசபில் டயாபர்கள் சோடியம் பாலிக்ரைசலேட் என்னும் கரிம பலபடி பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை உபயோகப்படுத்திவிட்டு தூக்கி எறிவதனால் மண்ணில் மட்டுவதற்குநூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன.

பிளாஸ்டிக் வடிவத்திலான இந்த ரசாயனம், சிதைவடைய 500 ஆண்டுகாலம் தேவை. துணி டயாபர்கள், சிதைவுற 100 ஆண்டுகளே ஆகின்றன. இதே போன்று, சுத்தம் செய்து, மீண்டும் பயன்படுத்தப்படும்டயாபர்களும் உள்ளன. இந்த டயாபர்கள் ஈரமானதும், அவற்றின் உள்ளே இருப்பவற்றை தூக்கி எறிந்து விட்டு, துவைத்த பின், மீண்டும் பயன்படுத்தலாம். முதல் குழந்தைக்கு பயன்படுத்திய, இந்த வகைடயாபர்களை, மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு பயன்படுத்துவதால், உலகம் வெப்பமயமாதல் 40 சதவீதம் குறையும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ரீயூசபிள் டயாபர்'கள் சிதைவடைய, ஆறு மாதகாலமே ஆகின்றன.

வெட்டப்படும் மரங்கள்:
உலகில் தயாரிக்கப்படும் டயாபர்களில் 70 சதவீதம், காகிதங்களில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. இதனால், உலகளவில், ஆண்டுக்கு 100 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒரு மரத்தை உருவாக்க,உரங்கள், பூச்சி மருந்துகள், தண்ணீ¬ர் என ஏராளமானவை தேவைப்படுகிறது. டயாபர்கள் தயாரிப்பதற்காக, அதிகளவில் மரங்கள் வெட்டப்படுவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையைஏற்படுத்தியுள்ளது.

செலவு குறைவு:
'டிஸ்போசபிள்' டயாபர்களுக்கு மக்கள் ஏராளமான அளவில் பணம் செலவழிக்கின்றனர். ஆனால், 'ரீயூசபிள் டயாபர்'கள், மீண்டும் பயன்படுத்தப்படுவதால், அதற்கான செலவு குறைகிறது. எனவே, 'டிஸ்போசபிள்' டயாபர்களுடன் ஒப்பிடும் போது, 'ரீயூசபிள்' டயாபர்களால் அதிகளவு பணம் சேமிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பேஷனாக அணிவிக்க விரும்பினால், அதற்காகவே, துணி டயாபர்களில்,பல்வேறு வண்ணங்கள் மற்றும் பேஷன்களில் வருகின்றன. எனவே அதிக அளவு பணம் செலவு வைக்காத சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பில்லாத டயாபர்களை வாங்கி உபயோகிக்கவேண்டும் என்பது குழந்தைநல மருத்துவர்களின் அறிவுரையாகும்.

நன்றி - பரமகுடி சுமதி.

தெரிந்து கொள்வோமா-62 [நீரின் நிறம் மாறும் ஏரி]


lakes of varying colors.

Kelimutu ([kəliˈmutu]) is a volcano, Indonesia in central Flores Island of Indonesia.
The volcano contains three striking summit crater lakes of varying colors. Tiwu Ata Mbupu (Lake of Old People) is usually blue and is the westernmost of the three lakes. The other two lakes, Tiwu Nuwa Muri Koo Fai (Lake of Young Men and Maidens) and Tiwu Ata Polo (Bewitched or Enchanted Lake) are separated by a shared crater wall and are typically green or red respectively. The lake colors vary on a periodic basis. Subaqueous fumaroles are the probable cause of active upwelling that occurs at the two eastern lakes.

According to the local officer at Kelimutu National Park, the colour changes as a result of chemical reactions resulting from the minerals contained in the lake perhaps triggered by volcano gas activity

தெரிந்து கொள்வோமா-61 [வண்ணத்துப்பூச்சி]


Butterfly eggs as seen under an electron microscope:

Butterflies breed as many animals do---eggs from the female insect are fertilized by sperm from the male. The female butterfly stores the male's sperm in a bursa, or sac, until she is ready to lay eggs. Depending on the species, females lay eggs one at a time, in clusters, or in batches of hundreds. Butterflies lay an average of between 100 to 300 eggs, although some species may only lay a few dozen, others can lay as many as a thousand or more.

Read more: Facts About Butterfly Eggs | eHow.com http://www.ehow.com/about_7230489_butterfly-eggs.html#ixzz2NoMftD1I

Sunday, March 24, 2013

சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்? by Learn To Speak Tamizh (தமிழ் பேச கற்று கொள்ளுங்கள்)


சிலர் தமிழர்களாகப் பிறந்தும் அவர்கள் தமிழர்கள் என்பதை மறந்து வாழ்ந்து வருவது ஒரு வருத்தத்திற்குரிய செய்தியாகும். குறிப்பாகத் தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழில் பேசுவதை இழிவாக நினைத்து வாழ்கின்றனர். இவ்வாறு நினைப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் சில காரணங்கள் நியாயமானதாகவும், அதே வேளை குருட்டுத் தனமாகவும் உள்ளன. 


என்ன தான் காரணம்?


௧) உலகமெங்கும் ஆங்கிலம் தான் மிகுதியாகப் பேசப்படுகிறது என்ற தவறான எண்ணம். உலகமெங்கும் மிகுதியாகப் பேசப்படும் மொழி மண்டரின் (சீன மொழி) ஆகும். 


௨) தமிழ் மொழி இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் மட்டுமே பேசப்படுகிறது. வெளிநாடுகளுக்குச் சென்றால் தமிழில் பேச இயலாது. தமிழ் தமிழ்நாட்டில் மட்டுமே பேசப்படுகிறது என்று 'குண்டு சட்டியில் கழுதை மேய்க்கிறார்கள்'. நினைவில் கொள்க, தமிழ் மொழியானது உலகமெங்கும் பேசப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாது, தமிழ் ஈழம், கடார நாடு (மலேசியா), சிங்கை (சிங்கப்பூர்), மொரிசியசு போன்ற பல நாடுகளில் பேசப்படுகிறது. 


௩) ஏழை நாடுகளில் பேசப்படும் ஏழைகளின் மொழி தான் தமிழ் என்ற குருட்டு தனமான எண்ணம். 'பணக்காரர்களின் மொழி ஆங்கிலம், ஏழைகளின் மொழி தமிழ்'. இதற்கு முதல் காரணம், தமிழ் மிகுதியாகப் பேசப்படும் நாடான இந்தியா வறுமை நாடுகளில் ஒன்றாக இருப்பதே ஆகும். அமெரிக்காவில் பிச்சைக்காரன் ஆங்கிலத்தில் பேசினால், படித்த பிச்சைக்காரன் என்று மனதுக்குள் வருந்தும் நம் தமிழர்களுக்குத் தெரியவில்லை 'மானமுள்ள பிச்சைக்காரன், பிச்சை எடுத்தாலும் தாய் மொழியில் பேசுகிறான்' என்று.


௪) உலகில் நிறைய கல்வி சார்ந்த, தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் ஆங்கிலத்திலே பயன்படுத்துப்படுவதால். ஆம் உண்மையே, ஆங்கில மொழி உலகில் மிகுதியான நாடுகளில்/இடங்களில் பேசப்படுகிறது. இதற்கு முதல் காரணம் ஆங்கில மொழி மிக இலகுவாக இருப்பதே ஆகும். மேலும் பல மொழிகளின் கலப்பே ஆங்கிலம். ஆங்கிலம் என்ற ஒரு மொழியிலேயே நாம் பல மொழிகளைக் கற்றுக் கொள்ளலாம். இருப்பினும், ஆங்கிலம் ஒன்றை வைத்துக் கொண்டு நாம் பிற நாடுகளுக்குச் சென்று வாழ்ந்து விடலாம் என்பது தவறாகும். சீனா/ ஜப்பான்/ கொரியா போன்ற நாடுகளில் ஆங்கில மொழி மிகக் குறைவாகவே பேசப்படுகிறது. மேலும், அமெரிக்கா என்றால் ஆங்கிலம் என்று எண்ணி வாழ்கின்றனர் நம் அப்பாவி தமிழர்கள். உண்மை நிலை என்னவென்றால், அமெரிக்கா நாடுகளில் ஆங்கிலம் தெரியாத நாடுகளும் நிறைய உள்ளன. மேலும், அமெரிக்காவில் பல இடங்களுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டு நாம் சென்று வாழ இயலாது. உலகிலேயே வேறு தாய்மொழிகளைக் கொண்டும், மிகுதியாக ஆங்கிலத்தைப் பேசும் நாடு எனும் 'பெருமை'யைப் பெற்ற நாடு இந்திய நாடே ஆகும்.     
Languages spoken in America.
  

௫) அடுத்து மிக முக்கியமான காரணம். ஆதிக்காலத்தில் இருந்தே புலம்பெயர்ந்து வாழ்வதையே விரும்பும் நம் தமிழர்கள். 'வெளி நாடுகளுக்குச் சென்றால் ஆங்கிலம் கைக்கொடுக்கும்.' பிற நாடுகளுக்குச் சென்று உழைத்து ஊதியம் சேர்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு, பிற நாடுகளுக்குச் செல்லும் முன் ஆங்கிலம் கற்றுக் கொண்டு செல்கின்றனர். பிறகு தான் அவர்கள் உணர்கின்றனர், ஆங்கிலம் மட்டும் போதாது என்று. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு வேலை தேடி வரும் தமிழ் உறவுகள். மலேசியா என்றால் மலாய் மொழி தான் மிகுதியாகப் பேசப்படுகிறது. மலாய் மொழி, தமிழ், சமஸ்கிருதம், போர்த்துக்கீசியம், அரபு, ஆங்கிலம் போன்ற பல மொழிகளின் கலப்பில் தோன்றிய மொழியாகும். எழுத்து வடிவம் இல்லாத மொழி, எனவே இலத்தீன் எழுத்துக்களால் எழுதப்படுகிறது. சிங்கப்பூர் என்றால் சீன மொழி தெரிந்திருத்தல் சிறப்பு. 
கொடுமையிலும் பெருங்கொடுமை என்னவென்றால், ஆங்கிலம் சுத்தமாகப் படிக்கத் தெரியாதவர்களுக்காக மட்டுமே தமிழில் பெயர்ப்பலகை எழுதப்படுகிறதே தவிர யாரும் இங்கு மொழிப் பற்றோடு தமிழில் பெயர்ப்பலகைகள் இடவில்லை. எடுத்துக்காட்டாக, “சிவா டிராவல்ஸ், கவிதா டெக்ஸ்டைல்ஸ்” என்றெல்லாம் பெயர்ப்பலகைகள். இதற்கு பெயர் மொழி பற்றா? இதற்கு பெயர் “மொழிச்சிதைவு”. ஆங்கிலம் படிக்க தெரியாதாம். ஆனால், டிராவல்ஸ், டெக்ஸ்டைல்ஸ் என்று கொடுமையாக ஆங்கிலத்தையும் தமிழையும் ஒரே சொல்லில் போட்டுக் கொன்று புதைத்து எழுதினால் படித்து புரிந்து கொள்வார்களாம். ஆங்கிலம் மோகம் தலைவிரித்து ஆடினால், ஆங்கிலத்தில் எழுதி அதையே படித்துக் கொள்ள வேண்டியது தானே? மொழிப்பற்று என்ற தோல் போர்த்தி ஏன் இந்த நாடகம்? கொஞ்சமாவது உணரப் பாருங்கள். 

ஒன்று கூறிக் கொள்ள விருப்பப்படுகிறோம். ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள் தவறில்லை. நம் ஐயன் வள்ளுவன் அன்றே,


'எவ்வ துறைவது உலகம் உலகத்தோடுஅவ்வ துறைவது அறிவு'


என்று மொழிந்தார்.. அதாவது உலக வாழ் மக்கள் எத்தோடு ஒட்டி வாழ்கிறார்களோ, அத்தோடு நாம் இணைந்து வாழ்வது சிறப்பு. எனினும், தமிழ் நம் தாய்மொழி என்பதை மறக்கக் கூடாது. ஆங்கிலத்தையும் செவ்வனே கற்றுக் கொண்டு, ஆங்கிலத்தின் வழி தமிழையும் உலகமெங்கும் பரப்ப வேண்டும். வெறும் தமிழைக் கொண்டு, தமிழை உலகமெல்லாம் பரவ இயலாது. ஆங்கிலத்தின் தோள் மேல் தமிழை ஏற்றி தான் தமிழைக் கரை சேர்க்க இயலும். அதற்காக, ஆங்கிலத்தைத் தமிழிலும், தமிழை ஆங்கிலத்திலும் கலந்து மொழிச்சிதைவு செய்ய வேண்டாம். தமிழில் சிறப்புகளை எல்லாம் ஆங்கில மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யுங்கள். தமிழில் இருக்கும் பல அரிய நூல்களை எல்லாம் மொழிப்பெயர்ப்புச் செய்யுங்கள். எந்தவொரு மதத்தையும் தனித்தே கூறாமல், பொதுமறையாகத் திகழும் திருக்குறளின் உண்மையை ஆங்கிலத்தின் மூலம் உலகிற்குக் கொண்டு செல்லுங்கள். இவ்வளவு பொருள் கொண்ட திருக்குறள் எந்த மொழிக்குச் சொந்தம் என்று அறிந்து, அனைவரும் தமிழ் மீது ஆர்வம் கொள்வார்கள். அதுவே தமிழை உலகமெங்கும் பரப்பும் முதற்படியாகும். வெளிநாடுகளும் அவர்கள் தயாரிக்கும் தொழிநுட்பக் கருவிகளில் தமிழைப் புகுத்த ஆர்வம் செலுத்துவார்கள். ஆனால், நம் தமிழர்கள் என்னவோ ஆங்கிலத்தை தலையில் ஏற்றிக் கொண்டு தமிழை காலில் போட்டு மிதிக்கிறார்கள். 


தமிழர்களிடம் ஒரு சிறந்த பண்பு உள்ளது, அதாவது சாலையில் செல்லும், வழியில் சந்திக்கும் முதுமைப் பெண்களைக் கண்டால் 'அம்மா' என்றழைப்பது. அம்மா என்று ஒரு நற்பண்போடு, மரியாதையாக அழைக்கும் தமிழர்கள். தன்னை ஈன்றவள் தான் உண்மையான அம்மா என்று மறப்பதில்லை. அதுபோல, பன்மொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள், அதற்காகத் தமிழை மறந்து விடாதீர்கள். 

நல்ல தமிழில் பெயர்ப்பலகை -தமிழ்நாடு
நல்ல தமிழில் பெயர்ப்பலகை -மலேசியா

(நன்றி: 
Learn To Speak Tamizh (தமிழ் பேச கற்று கொள்ளுங்கள்)

Friday, March 22, 2013

தெரிந்து கொள்வோமா-60 [உலக வெப்பமயமாதல்]


உலக வெப்பமயமாதல் (Global Warming) :

இன்று உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான, முக்கியமான பிரச்சினை என்று பார்த்தால் அது உலகம் வெப்ப மயமாதல் தான்.
உலக வெப்பமயமாதல் என்றால் என்ன? நமது அநேக தொழிற்சாலைகள் , வாகனங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் மூலமாக அதிக அளவில் புகை வெளியிடப்படுகிறது . அப்படி வெளிடப்படும் புகையில் அதிக அளவில் CO2 மற்றும் SO2 ஆகியவை உள்ளது . இந்த வாயுக்கள் பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலத்தை அழிக்கும் சக்தி படைத்தவை. அதன் விளைவாக சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக பூமியை தாக்குகிறது . அதன் விளைவாக பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது

பூமி வெப்பமயமாதலின் விளைவுகள்:

பூமியின் வெப்பம் அதிகரித்தால் என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள் . முதலாவது அண்டார்டிகா பகுதியில் உள்ள பெரும் பனிபாறைகள் உருகும் . தற்பொழுதும் பெருமளவில் பனிபாறைகள் உருகி கொண்டு தான் இருக்கின்றன . அதன் விளைவாக பெருமளவு தண்ணீர் கடலில் சேர்ந்து கடலின் நீர் மட்டம் உயரும் . கடலின் நீர் மட்டம் உயர்ந்தால் பெரும்பாலான தீவுகள் காணாமல் போகும் . மாத்திரமல்ல கடலோர கிராமங்களை கூட அரித்து கொண்டு போகும்.
உலக அளவிலாக கடந்த 100 ஆண்டுகளில், புவி மேற்பரப்பின் வெப்ப நிலை 0.74 டிகிரி செல்சியசாக உயர்ந்துள்ளதாம். 1850ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டவைகளிலேயே கடந்த 11 வருடங்கள் தான் அதிக (2001-2012) வெப்பமயமான வருடங்கள்

பூமி வெப்பமயமாதலின் வரலாறு:

இன்று உலக நாடுகள் என்பது எல்லா நாடுகளிலும் வசிக்கும் மக்களை.
"உலகம் வெப்பமயமாதலை தடுக்க வேண்டும்...", "கடல் நீர் மட்டம் உயர்ந்து கொண்டுள்ளது...", "இந்த நூற்றாண்டிலோ அல்லது அடுத்த நூற்றாண்டிலோ இந்த உலகம் கடல் நீரால் மூழ்கடிக்கப்பட்டு விடும்!"
என்று இப்போது எல்லோரும் அதைப்பற்றி பேசுகிறோம், அதை எப்படி தடுப்பது என்று மாநாடுகளெல்லாம் போடுகிறோம். ஆனால் இந்த உலகம் வெப்பமயமாதல் நேற்று, இன்று தோன்றியதில்லை.இதன் வரலாறு 17,000 ஆண்டுகள் பழமையானது!
ஆம், 17,000 ஆண்டுகள் என்று சொல்லுவது சரியானதா? அல்லது அதற்க்கு முன்போ கூட உலக வெப்பநிலையில் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். முதன் முறையாக நிகழ்ந்த அந்த வெப்பநிலை உயர்வு இயற்கையானது. என்பது அறிவியலாளர்களின் கருத்து.

இதைப்பற்றி மேலும் அவர்கள் கூறும் பொது:


மனித நாகரிகம் தோன்ற இந்த வெப்ப நிலை உயர்வு மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது. முதன் முதலாக உலகின் வட மற்றும் தென் துருவங்களில் இருந்த பனிப்பாறைகள் மெல்ல மெல்ல உருகத்தொடங்கின. ஆங்காங்கே இருந்த ஏரிகளும், நீர்நிலைகளும், நதிகளாக மாறின. இதன் தொடர்ச்சியாக கோடான கோடி டன் பனிப்பாறைகளும் உருகி நதிகளாக ஓடி கடலில் கலந்து கடல் நீர்மட்டம் உயார்ந்தது.
கி.மு 10,000இல் அப்பிரிக்காவின் மத்தியிலுள்ள விக்டோரியா ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வழியத்தொடங்கியதில் பிரம்மாண்டமான நைல் நதி உருவானது.தென் அமெரிக்க வின் அமேசான் நதி தனக்குத்தானே வழி வகுத்துக்கொண்டது. தொடர்ந்து கிட்டத்தட்ட 3000௦௦ ஆண்டுகள் பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகின. இதனால் பல பகுதிகள்
நீரினால் மூழ்கடிக்கப்பட்டன. அமெரிக்காவிற்கும் பிறநாடுகளுக்கும் இடையிலான தரை வழி தொடர்பு துண்டிக்கப்பட்டது இதனால்தான். அதே போல் கொரியவுடனும், சைபீரியவுடனும் ஒர்ட்டிக்கொண்டிருந்த ஜப்பான் இதனால் தான் தனித்து விடப்பட்டது. கி.மு 15000 ௦௦இல் தற்போதுள்ள மெரீனா கடற்க்கரை 600 கி.மீ கிழக்குப் புறமாக தள்ளி இருந்தது! என்பதை உங்களால் நம்பமுடிகிறத? அண்மையில் குஜராத்தில் கடலுக்கடியில் 9 கி.மீ நீளத்தில் ஒரு நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அன்றைய மனிதன் இதனையெல்லாம் கவனிக்கவில்லை. அப்படியே கவனித்திருந்தாலும் அதனால் ஏற்ப்படும் பாதிப்புகளை அவன் அனுமானித்திருக்க வாய்ப்பில்லை. இன்று நாம் ஏன் இப்படி இதைப்பற்றி அதிகமாக கவலைப்படுகிறோம் என்றால்?... அன்று 3000௦௦ ஆண்டுகள் தொடர்ந்து பனிக்கட்டி உருகியதால் ஏற்ப்பட்ட கடல் நீர் மட்ட உயர்வை விட இன்று ஒரு நூற்றாண்டில் ஏற்ப்படும் கடல் நீர் மட்ட உயர்வு அதிகம். தற்போது நாம் வெளியேற்றும்அதிகப்படியான கார்பன் மற்றும் அவற்றின் கூட்டுப்பொருள்களின் அளவினால் உலக வெப்பநிலை உயர்வு வேகமாகவும், அதிகமாகவும் நிகழ்ந்து வருகிறது.
ஆம்.20 ௦ம் நூற்றாண்டில் மட்டும் 17 செ.மீ கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 21 ம் நூற்றாண்டில் இது மேலும் 18-50 செ.மீ உயரும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. கடல் நீர் மட்டம் உயர்ந்த பொது ஏராளமான உயிரினங்கள் அழிந்து போயின. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து கடல் நீர் மட்ட உயர்வினால் அழிந்த உயிரினனகளில் மனித இனமும் ஒன்று. என்ற நிலை வரலாம். அல்லது மனிதன் தன் அசாத்தியமான அறிவுத்திறனால் புதிய உலகையே நிர்மாணிக்கலாம். ஆனால் அது வரையில் இப்போது இருக்கும் இடத்தை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. அதற்கு அறிவியலாளர்கள் கூறும் வழி முறைகளை நாம் பின்பற்றித்தானாகவேண்டும்.

தட்பவெட்ப நிலை:

கோடைக்காலத்தில் கடுமையான வெப்பத்தையும் குளிர்காலத்தில் மிகவும் குளிர்ச்சியாகவும் உணர்கிறோம். இவைதான் நாம் அனுபவிக்கும் தட்பவெப்ப நிலைகள். ஓர் இடத்தின் தட்ப வெப்பநிலை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நாம் அனுபவிக்கும் சராசரியான கால நிலையைக் குறிப்பது. மழை, சூரிய ஒளி, காற்று, ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை இவையே ஓர் இடத்தின் தட்பவெப்ப நிலையை நிர்ணயிக்கும் காரணிகள்.
சீதோஷ்ணநிலை மாற்றங்கள் திடீரென்றும், வெளிப்படையாகவும் ஏற்படும். ஆனால், தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு நீண்ட காலமாகும். அதனால் அந்தளவுக்கு உடனடியாக அவற்றை உணர முடிவதில்லை. பூமியில் பலவிதமான தட்பவெப்ப மாற்றங்கள் ஏற்படுகின்றன. அனைத்து வகையான உயிரினங்களும் அவற்றுக்கேற்ப இயல்பாகத் தம்மைத் தக்கவைத்து கொண்டிருக்கின்றன.
இருந்தாலும் கடந்த 150-200 ஆண்டுகளில் தட்பவெப்பநிலை மாற்றங்கள் மிகக் குறுகிய காலத்தில் ஏற்பட்டுவருகின்றன. சில குறிப்பிட்ட தாவர மற்றும் விலங்கினங்கள் இப்படிப்பட்ட மாற்றங்களுக்கேற்பத் தகவமைத்துக்கொள்ள முடிவதில்லை. மனிதனுடைய நடவடிக்கைகளே இப்படிப்பட்ட மாற்றங்கள் இவ்வளவு வேகமாக நடைபெறுவதற்கான காரணம் என்று கருதப்படுகிறது.\

தட்பவெப்ப நிலை மாற்றங்களுக்கான காரணங்கள்
வெப்பநிலை மாற்றங்கள் ஏற்படுத்துகிற காரணங்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். இயற்கையானது மற்றும் மனிதனால் ஏற்படுவது.

1. இயற்கையான காரணங்கள்:

வெப்பநிலை மாற்றங்களுக்கு நிறைய இயற்கையான காரணங்கள் உள்ளன. கண்டங்களின் விலகல், எரிமலைகள், கடல் நீரோட்டங்கள் மற்றும் பூமிசரிவு இதற்கான சில முக்கிய காரணிகள்.

கண்டங்கள் விலகுதல்:

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன், நிலப்பரப்பு படிப்படியாக விலகியதால் ஏற்பட்டதே இன்று நாம் காணும் கண்டங்கள். இப்படிப்பட்ட இந்த விலகல் மற்றும் கடல் நீரோட்டங்களின் போக்குகளும், நீர்ப்பரப்புகளின் இடங்களை மாற்றின. இவை தட்பவெப்ப நிலையில் தாக்கங்கள் ஏற்படுத்தின. கண்டங்களின் விலகல்கள் இன்றும் தொடர்கின்றன.

எரிமலைகள்:

ஒரு எரிமலை வெடிக்கும்போது, அது மிகப் பெரிய அளவில் சல்ஃபர்-டை-ஆக்ஸைடு, (SO2) நீராவி, தூசி மற்றும் சாம்பல் இவற்றை வாயு மண்டலத்தில் வெளியேற்றுகிறது. இப்படிப்பட்ட இந்த எரிமலை வெடிக்கும் நிகழ்வு சில நாட்களுக்கே நீடிக்கிறது. இருப்பினும், மிகப்பெரும் அளவில் அவற்றிலிருந்து தூக்கி எறியப்படும் வாயு மற்றும் சாம்பல் தட்பவெப்பநிலை முறைகளில் பல வருடங்களுக்குத் தாக்கம் ஏற்படுத்துகிறது. அதிலிருந்து வெளியேறும் வாயுக்கள் மற்றும் தூசி, துகள்கள், சூரிய கதிர்களை ஓரளவுக்கு மறைக்கின்றன. இதனால் குளிர்ச்சி உண்டாகிறது.

பூமியின் சாய்மானம்:

பூமி தனது சுற்றுப்பாதையில் 23.5o கோணத்தில் செங்குத்தான நிலையில் சாய்ந்திருக்கிறது. இந்தப் பூமியின் சரிவில் ஏற்படும் மாற்றங்கள் பருவகாலங்களின் தீவிரத்தன்மையில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அதிக சரிவு, கோடைக்காலங்களில் அதிக வெப்பத்தையும், குளிர்ந்த காலங்களில் அதிக குளிரையும் ஏற்படுத்துகின்றன. குறைந்த அளவு சாய்மானம் கோடையில் வெப்பத்தையும், குளிர்காலத்தில் குளிரையும் குறைக்கின்றன.

கடல் நீரோட்டங்கள்:

சமுத்திரங்கள் தட்பவெப்ப நிலை அமைப்பில் மிகமுக்கியமான பங்கு வகிக்கின்றன. அவை பூமியின் 71% பகுதியை ஆக்கிரமித்துள்ளன. சூரியன் கதிர்வீச்சை வாயு மண்டலம் மற்றும் நிலப்பரப்பு கிரகித்துக்கொள்வதைவிட இரு மடங்கு அதிகமாக இவை கிரகித்துக் கொள்கின்றன.

2. மனிதனால் ஏற்படுவது:


பசுமை இல்ல விளைவு
பூமி, சூரியனிடமிருந்து ஆற்றலைப் பெறுகிறது. இது பூமியின் நிலப்பரப்பை வெப்பமாக்குகிறது. இந்த ஆற்றல் வாயு மண்டலத்தினூடே கடந்து செல்கையில், இதன் ஒரு குறிப்பிட்ட அளவு (சுமார் 30%) சிதறுண்டுபோகிறது. பூமியிலிருந்தும், கடல் பரப்பிலிருந்தும் இந்த ஆற்றலின் ஒரு பகுதி, வாயு மண்டலத்திற்குள் பிரதிபலிக்கப்படுகிறது. வாயுமண்டலத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட வாயுக்கள் பூமியைச் சுற்றி ஒரு விதமான போர்வை போர்த்தியது போன்று பரவியுள்ளன. அவையாவன, கார்பன்-டை- ஆக்ஸைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு. இவைதான் ‘பசுமை இல்ல வாயுக்கள்’ (கிரீன்- ஹவுஸ் வாயுக்கள்) என்று அழைக்கப்படுகின்றன. பசுமை இல்ல (கிரீன்- ஹவுஸ்) வாயுக்கள், நீராவியுடன் சேர்ந்து வாயு மண்டலத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. இவை வாயு மண்டலத்தில் பிரதிபலிக்கப்படுகிற ஆற்றலிருந்து சிறிதளவைக் கிரகித்துக்கொள்கிறது. எப்படிப் பசுமை இல்லத்தின் கண்ணாடி சூரியக் கதிரியக்கத்தின் அதிகப்படியான ஆற்றலைத் தடுக்கிறதோ, அப்படியே இந்த ‘வாயுப் போர்வை’ பூமியில் வெளிப்படுத்தப்படும் சக்தியை கிரகித்துக்கொண்டு வெப்பநிலை அளவுகளைத் தக்க வைத்துக்கொள்கிறது. இதனால் இது ‘பசுமை இல்ல விளைவு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஜீன் - பாப்டிஸ்ட் ஃபோரியர் என்ற பிரஞ்சு நாட்டு விஞ்ஞானி இந்த பசுமை இல்ல விளைவை (கிரீன்- ஹவுஸ் விளைவு) முதன் முதலாக அடையாளம் கண்டவர். அவர் வாயுமண்டலத்தின் நிகழ்வு மற்றும் கிரீன்ஹவுஸ் நிகழ்வின் ஒற்றுமையைச் சுட்டிக் காட்டினார்.
கிரீன் ஹவுஸ் வாயுக்களாளான போர்வை, உலகம் உருவானதிலிருந்தே உள்ளன. ஆனால் மனித குலத்தின் நடவடிக்கைகள் அதிகரிக்க அதிகரிக்க, இந்தக் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அதிகமதிகமாக வாயு மண்டலத்திற்குள் விடப்படுகின்றன. இதன் விளைவாக, இந்தப் போர்வை தடிமனாகிக்கொண்டிருக்கிறது. இது ‘இயற்கையான கிரீன்ஹவுஸ் விளைவை’ பாதிக்கிறது.
நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற எரிபொருட்களை நாம் எரிக்கும்போது, கார்பன் - டை - ஆக்ஸைடு (கரிம வாயு) வெளியேற்றப்படுகிறது. மற்றும் நாம் காடுகளை அழிக்கும்போது, மரங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கார்பன் வாயு மண்டலத்தில் கார்பன் - டை - ஆக்ஸைடாகக் கலக்கிறது. அதிகரித்துவரும் விவசாய நடவடிக்கைகள், நிலத்தைப் பயன்படுத்தும் முறையில் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் வேறுசில நடவடிக்கைகள் இவை அனைத்தும் மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுக்களின் அளவுகளை அதிகரிக்கச் செய்கின்றன. தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளும் செயற்கையான மற்றும் புதிய கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அதாவது CFCக்கள் (க்ளோரோஃபுளூரோ கார்பன்கள் (Chlorofluorocarbons) போன்றவற்றை வெளியேற்றுகின்றன. மோட்டார் வாகனங்கள் வெளியேற்றும் புகை ஓஸோனை அதிகரிக்கச் செய்கின்றன. அதிகரிக்கப்பட்ட வரும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் பூமியின் வெப்ப நிலையை அதிகரிக்கிறது. இந்த விளைவு பொதுவாக 'உலகம் வெப்பமயமாதல்' அல்லது 'வெப்பநிலை மாற்றம்' என்று குறிப்பிடப்படுகிறது.

கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அதிகரிப்பிற்கு நாம் எப்படி காரணமாக இருக்கிறோம்?
நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரிபொருள்களைப் பயன்படுத்துவது. அதிக நிலத்திற்காக மரங்களை அதிகமாக வெட்டிப்போடுவது. மக்கிப் போகாத கழிவுப் பொருள்களின் (ப்ளாஸ்டிக்) பெருக்கம்.விவசாயத்திற்காக உரங்கள், பூச்சிக்கொல்லிகளைக் கண்மூடித்தனமாகப் பயன்படுத்துதல்.

தட்பவெப்பநிலை மாற்றம் நம்மை எப்படிப் பாதித்தது?
வெப்பநிலை மாற்றம் மனித குலத்துக்கே அபாயமானது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பூமியின் சராசரி வெப்ப நிலை, 0.3 - 0.60C வரை உயர்ந்துள்ளது. இந்த வெப்ப நிலை உயர்வு நமக்கு மிகவும் குறைந்த அளவாகத் தோன்றலாம். ஆனால், கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் பேரழிவுக்கு இவை வழி வகுக்கும்.

விவசாயம்
அதிகரித்துவரும் மக்கள் தொகை உணவுக்கான தேவையை அதிகரிக்கிறது. இதனால் இயற்கை வளங்களை அதிகமாகப் பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. வெப்பநிலையில் ஏற்படும் வேறுபாடுகள், தட்பவெட்ப நிலை மற்றும் மழை ஆகியவற்றில் மாறுபாடுகளை ஏற்படுத்துவதன் மூலம், விவசாயத்தை நேரடியாக பாதிக்கிறது. மண்வளம், பூச்சிகள் மற்றும் நோய்களின் மாற்றங்கள் மூலமாக மறைமுகமாக விவசாயத்தை பாதிக்கிறது. தானிய வகைகளில் விளைச்சல் இந்தியாவில் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. மிகக் கடுமையான வெப்பம், மிக அதிகமான மழை, வெள்ளம், வறட்சி முதலிய அதீதமான சீதோஷ்ண நிலைகளும் விளைபொருள்களின் உற்பத்தியைப் பாதிக்கின்றன.

வானிலை
உயர்ந்து வரும் வெப்பநிலை, மழை பெய்யும் நிலவரங்களை மற்றக்கூடியது. வறட்சி மற்றும் வெள்ளம் ஏற்படுதலை அதிகரிக்கச் செய்கிறது. பனிப்பாறைகள் மற்றும் துருவப் பனிப்படிவங்கள் உருகுவது அதிகரிப்பதால், கடல் மட்டம் அதிகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் புயல், சூறாவளி போன்றவற்றுக்கும் வெப்பநிலை மாற்றங்களின் விளைவுகளே காரணம் என்று கருதப்படுகிறது.

கடல் மட்டம் அதிகரித்தல்
வெப்பநிலை மாற்றத்தின் விளைவுகளில் ஒன்று கடல் மட்ட உயர்வு. கடல்நீர் வெப்பமடைதல், பனிப்பாறைகள் மற்றும் போலார் பனி படிவுகள் உருகுதளால், அடுத்த நூற்றாண்டுக்குள் சுமார் அரை மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயரப்போகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வதால், மணல் அரிப்பு ஏற்பட்டு நிலப்பகுதிகள் கடலில் மூழ்குதல், வெள்ளப் பெருக்கு ஏற்படுவது அதிகரிப்பது, நீர்நிலைகள் உவர்ப்பாக மாறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இவை, கடல் பகுதி விவசாயம், குடிநீர் ஆதார வளங்கள், மீன்பிடி தொழில், மக்கள் குடியிருப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உடல் நலம்
பூமி வெப்பமயமாதல் மனிதகுல ஆரோக்கியத்தை நேரடியாக பாதித்து, வெப்பம் சம்பந்தப்பட்ட நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாகும். உடலில் நீரிழப்பு, தொற்று நோய் பரவல், ஊட்டச் சத்துக் குறைபாடு, பொது மருத்துவம் சார்ந்த உள்கட்டமைப்பைப் பாதித்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

காடுகள் மற்றும் வன விலங்குகள்
இயற்கையான சூழலில் இருக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வெகு விரைவில் பாதிக்கப்படுகின்றன. வெப்பமாற்றத்தின் விகிதம் தொடர்ந்து அதிகரித்தால், பல்வேறு தாவர இனங்களும், விலங்கினங்களும் அழியக்கூடிய நிலை ஏற்படலாம்.

கழிவுகளினால் ஏற்படும் விளைவுகள்
பெருகி வரும் தொழில்மய நடவடிக்கைகளும் அதனால் விளையும் பெருங்கழிவுகளும் (அணு மற்றும் அனல் மின் திட்டங்கள்,துறைமுகங்கள், சுரங்க நடவடிக்கைகள், உரக்கழிவுகளை அதிகரிக்கும் விவசாயத் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் திட்டங்கள், நகர்மயமாதலால் விளையும் கழிவுகள், போன்றவை) வெப்ப நிலை அதிகரிப்பிற்குக் காரணாமாக உள்ளன. நகராட்சிக் கழிவு நீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் 80%க்கும் மேல் நச்சு இரசாயனங்கள், கனஉலோகங்கள், திட உயிர்க் கழிவுகள், கதிரியக்கக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டது. சூடான தொழிற்சாலைக் கழிவுகளும் கடல் நீரில் கலக்கப்படுகிறது. இந்த அனைத்து கழிவுகளும், கடற்கரை நீரோட்டத்தின் மூலம் பரவலாக்கப்படுகிறது. இந்த மாசுபாடுகள் கடல் உணவுச் சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தி, கடல் உணவை உட்கொள்ளும் மனிதர்களுக்கும் ஆரோக்கியக் கேட்டினை ஏற்படுத்துகிறது.

தடுப்பு நடவடிக்கைகள்
Ø புதுப்பிக்க முடியாத எரிசக்தி ஆதாரங்களின் உபயோகங்களைக் குறைத்துக்கொள்தல் (நிலக்கரி போன்ற எரிபொருட்கள்).
Ø எரிபொருட்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் முக்கியமாக பெரிய ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகைமண்டலத்தை மாசு கட்டுப் பாட்டு வாரியம் தடை செய்ய வேண்டும்
Ø புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆதாரங்களின் உபயோகத்தை அதிகரித்தல்- சூரிய மற்றும் காற்று ஆதாரங்கள் முதலியவை.
Ø அதிக அளவில் மரங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேலும் மரங்களை வளர்த்தல்.
Ø மக்கிப் போகாத ப்ளாஸ்டிக் போன்ற பொருட்களின் கண்மூடித்தனமான உபயோகத்தை தவிர்த்தல்
Ø காடுகளை அழிவிலிருந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு

Sunday, March 17, 2013

தெரிந்து கொள்வோமா-59 [தமிழின் தன்மைகள்/ சிறப்புகள்]


Tamil language possess 16 great qualities :

1. Thematic significance
2. Simplicity
3. Antiquity
4. Alphabet
5. Resonance
6. Refined
7. Music
8. Literature
9. Sweetness
10. Accuracy
11. Rich vocabulary
12. Poetry
13. Maternity
14. Boundless
15. Grammar
16. Uniqueness

விமானத்தில் இருந்து பார்க்கும் போது மழையின் தோற்றம் & மெர்குரி கிரகம்





This is how rain looks like if u are on the air!!!! Simply Amazing!!





NASA has just released this amazing false-colour image of Mercury, which reveals the rich variety of chemicals, minerals and physical features that make up the planet's surface. The image was captured by NASA’s Messenger spacecraft, currently orbiting Mercury.

Image: NASA

Saturday, March 16, 2013

தெரிந்து கொள்வோமா-46 [தமிழின் தொன்மை...]


வள்ளுவம் தோன்றியது குமரி மலையில் தான் என்பதில் எள்ளளவும் எனக்கு ஐயமில்லை. திருவள்ளுவரின் காலம் கி.மு 3 - ம் நூற்றாண்டாக இருக்கக் கூடும். மேலும் இதனை மெய்ப்பிக்கும் விதமாக தற்பொழுது ஆராய்சிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. அதில் என்னை ஆச்சரியப்படுத்திய சில உண்மைகள் :
1. இந்தியாவிலேயே படிப்பறிவு சதவீதம் அதிகம் பெற்றது தென் இந்தியாவில் உள்ள கேரளா.
2. தமிழகத்திலேயே படிப்பறிவு சதவீதம் அதிகம் பெற்றது குமரி மாவட்டம்.
3. இந்தியாவின் ISRO -வில் உள்ள 80 % பேர் தென் தமிழகத்தையும், கேரளத்தையும் சார்ந்தவர்கள்.
4. புகழ் பெற்ற விஞ்ஞானியான சார்லஸ் டார்வின் தனது மனிதத்தோன்றல் பற்றிய ஆராய்ச்சியின்
முடிவாக குரங்கிலிருந்து சிந்திக்கும் திறன் பெற்ற மனிதக்குரங்குகள் முதன் முதலில் தோன்றிய இடமாக
குமரி மாவட்டத்துக்கு அருகில் தற்பொழுது கடலில் மூழ்கியுள்ள (குமரிக் கண்டம்) லெமூரியா கண்டத்தையே
குறிப்பிடுகிறார். பிரடெரிக் ஏஞ்சல்ஸ் மற்றும் பிலிப் சிலேட்டர் போன்ற விஞ்ஞாணிகளும் இதையே கூறினார்.

(இந்த உண்மை தற்பொழுதுதான் வெளிவந்துள்ளது)
5. அமெரிக்காவின் NASA விண்வெளி ஆய்வகத்தில் பணிபுரியும் 60 % இந்தியர்களில் ஏறத்தாழ 80 % பேர் தென்
இந்தியாவை குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவைச் சார்ந்தவர்கள்.
--------உலகின் வேறெந்த பகுதியைக் காட்டிலும் இந்தப் பகுதியிலே சூரியனின் ஒளி ஆற்றல் மிகுதியாக கிடைக்கிறது. சூரிய ஒளியே மனிதனின் சிந்திக்கும் ஆற்றலின் மூலம் என்பதை நாம் அறிவோம். இதை விட ஒரு மிக முக்கியமான உண்மை என்னவெனில்? பூமிப் பந்து தன் அச்சைப் பற்றிச் சுழலும் போது புவி நடுவரைக் கோட்டுப் பகுதியே மீப்பெரும் திசை வேகத்தைப் பெறுகிறது. இதற்கும் மனித சிந்தனைக்கும் தொடர்பு உள்ளதாக தற்பொழுது விஞ்ஞானிகளின் கருத்து. இப்பகுதியில் தான் வள்ளுவன் நாடு, நாஞ்சில் நாடு மற்றும் அகத்தியர் வாழ்ந்த பொதிகை மலை உள்ளது. மேலும் ஏழ்தெங்க நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன் பாலை நாடு, ஏழ்பின் பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ்குண காரை நாடு, ஏழ்குறும்பனை நாடு, குமரிக் கொல்லம், பன்மலை நாடு போன்ற 49 நாடுகள் இந்தியப் பெருங்கடலில் உள்ளன. ஆனால் தற்பொழுது இவை அனைத்தும் கடலில் மூழ்கி விட்டன. இப்பொழுது கன்னியாகுமரியில் உள்ளதாக நாம் நினைத்துக் கொண்டிருப்பது அவற்றின் எச்சமே ஆகும். இந்த எச்சப்பகுதியிலேயே இவளவு அறிவு சார் மக்கள் இருந்தால், மூழ்கிய பகுதியில் எப்படி இருந்திருப்பார்கள் என எண்ணிப் பார்கிறேன். ஆனால் திருவள்ளுவர் வாழ்ந்தது இப்பொழுது இருக்கும் குமரி மாவட்டத்திலுள்ள வள்ளுவ நாடு என்ற மலை கிராமமே ஆகும். இப்படி ஆராய்சிகள் போய்க் கொண்டு இருக்கின்றன. தாங்கள் இது போன்று ஆராய்ச்சியிலும் நமது குலத்தைச் சார்ந்த பலரும் வர வேண்டும் என்பது எனது விருப்பம்.

Thursday, March 14, 2013

ஜோசியம் பார்க்குறதே....



Look Up Your Birthday And See What You Are...
January 01 - 09 ~ Dog
January 10 - 24 ~ Mouse
January 25 - 31 ~ Lion

February 01 - 05 ~ Cat
February 06 - 14 ~ Dove
February 15 - 21 ~ Turtle
February 22 - 28 ~ Panther

March 01 - 12 ~ Monkey
March 13 - 15 ~ Lion
March 16 - 23 ~ Mouse
March 24 - 31 ~ Cat

April 01 - 03 ~ Dog
April 04 - 14 ~ Panther
April 15 - 26 ~ Mouse
April 27 - 30 ~ Turtle

May 01 - 13 ~ Monkey
May 14 - 21 ~ Dove
May 22 - 31 ~ Lion

June 01 - 03 ~ Mouse
June 04 - 14 ~ Turtle
June 15 - 20 ~ Dog
June 21 - 24 ~ Monkey
June 25 - 30 ~ Cat

July 01 - 09 ~ Mouse
July 10 - 15 ~ Dog
July 16 - 26 ~ Dove
July 27 - 31 ~ Cat

August 01 - 15 ~ Monkey
August 16 - 25 ~ Mouse
August 26 - 31 ~ Turtle

September 01 - 14 ~ Dove
September 15 - 27 ~ Cat
September 28 - 30 ~ Dog

October 01 - 15 ~ Monkey
October 16 - 27 ~ Turtle
October 28 - 31 ~ Panther

November 01 - 16 ~ Lion
November 17 - 30 ~ Cat

December 01 - 16 ~ Dog
December 17 - 25 ~ Monkey
December 26 - 31 ~ Dove

If you are a

Dog : A very loyal and sweet person. Your loyalty can never be doubted. You are quite honest and sincere when it comes to your attitude towards working. You are a very simple person, indeed. Absolutely hassle free, humble and down-to-earth!! That explains the reason why your friends cling on to you! You have a good taste for clothes. If your wardrobe is not updated with what is trendy, you sure are depressed. Popular and easy-going. You have a little group of dignified friends, all of them being quality-personified. Repost This If It's True For You.!!

If you are a Mouse : Always up to some sort of a mischief! The mischievous gleam in your eyes is what makes you so cute and attractive to everyone. You are an extremely fun-to-be-with kind of person. No wonder people seek for your company and look forward to include you for all get-together's. However, you are sensitive which is a drawback. People need to select their words while talking to you. If someone tries to fiddle around and play with words while dealing with you, it is enough to invite your wrath. God bless the person then!Repost This If It's True For You.!!

If you are a Lion : Quite contradictory to your name, you are a peace loving person. You best try to avoid a situation wherein you are required to fight. An outdoor person, you dislike sitting at one place for a long duration. Popular and easy-going. You are a born leader, and have it in you how to tactfully derive work from people. People love the way you always treat them. You love being loved, and when you receive your share of limelight from someone, you are all theirs!!!!Repost This If It's True For You.!!

If you are a Cat : An extremely lovable, adorable person, sometimes shy, with a passion for quick wit. At times, you prefer quietness. You love exploring various things and going into depth of each thing. Under normal circumstances you're cool but when given a reason to, you are like a volcano waiting to erupt. You're a fashion bird. People look forward to you as an icon associated with fashion. Basically, you mingle along freely but don't like talking much to strangers. People feel very easy in your company. You observe care in choosing your friends.Repost This If It's True For You.!!

If you are a Turtle : You are near to perfect and nice at heart. The examples of your kindness are always circulated in groups of people. You, too, love peace. You wouldn't like to retaliate even to a person who is in the wrong. You are loved due to this. You do not wish to talk behind one's back. People love the way you always treat them. You can give, give and give love, and the best part is that you do not expect it back in return. You are generous enough. Seeing things in a practical light is what remains the best trait of you guys.Repost This If It's True For You.!!

If you are a Dove : You symbolize a very happy-go-lucky approach in life. Whatever the surroundings may be, grim or cheerful, you remain unaffected. In fact, you spread cheer wherever you go. You are the leader of your group of friends and good at consoling people in their times of need. You dislike hypocrisy and tend to shirk away from hypocrites. They can never be in your good books, no matter what. You are very methodical and organized in your work. No amount of mess, hence, can ever encompass you. Beware, it is easy for you to fall in love....Repost This If It's True For You.!!

If you are a Panther : You are mysterious. You are someone who can handle pressure with ease, and can handle any atmosphere without going berserk. You can be mean at times, and love to gossip with your selected group. Very prim and proper. You like all situations and things to be in the way you desire, which, sometimes is not possible. As a result, you may lose out in some relationships. But otherwise, you love to help people out from difficult and tight spots when they really need you.Repost This If It's True For You.!!

If you are a Monkey : Very impatient and hyper!!! You want things to be done as quick as possible. At heart, you are quite simple and love if you are the center of attraction. That way, you people are unique. You would like to keep yourself safe from all the angles. Shall your name be dragged or featured in any sort of a controversy, you then go all panicky. Therefore, you take your precautions from the very beginning. When you foresee anything wrong, your sixth sense is what saves you from falling in traps. Quite a money minded bunch you people are!!Repost This If It's True For You.!!
Awesome Page :●► ● Awesome Quotes
Official Website:●► ● www.AwesomeQuotes4U.com

அருமையான புகைப்படங்கள்...

Ceropegia haygarthii-Rare flower...



The Karakoram Highway (KKH) is the highest paved international road in the world.[1] It connects China and Pakistan across the Karakoram mountain range, through the Khunjerab Pass, at an elevation of 4,693 m/15,397 ft as confirmed by both SRTM and multiple GPS readings.[2] It connects China's Xinjiang region with Pakistan's Gilgit–Baltistan and Khyber Pakhtunkhwa regions and also serves as a popular tourist attraction. Due to its high elevation and the difficult conditions in which it was constructed, it is also referred to as the "Eighth Wonder of the World."[3]




NASA captures Guatemala Volcano erupting from space..



Puffer fish.
There are around 120 known
species of puffer fish, the second
most poisonous creature on the
planet after the Golden Poison frog



Monkey orchids (Orchis simia). The species' range is Europe, the Mediterranean, Russia, Asia Minor and Iran.



அகங்காரம் மற்றும் ஆன்மா....

Sunday, March 10, 2013

தெரிந்து கொள்வோமா-58 [செல்லிடப்பேசியில் இடம்பெறும் சங்கேத எண்கள்..]


செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!

*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.

*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)

To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.

*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.

If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345

*#3925538# – used to delete the contents and code of wallet.

Saturday, March 9, 2013

தெரிந்து கொள்வோமா-57 [தனி மனிதனாக இருந்து 1,360 ஏக்கர் காட்டை உருவாக்கியவர்]


‎"The snakes died in the heat, without any tree cover. I sat down and wept over their lifeless forms. It was carnage. I alerted the forest department and asked them if they could grow trees there. They said nothing would grow there. Instead, they asked me to try growing bamboo. It was painful, but I did it. Nature has made a food chain; why can't we stick to it? Who would protect these animals if we, as superior beings, start hunting them?" - Jadav Molai Payeng, who single-handedly created a 1360 acre forest.

#respect

தெரிந்து கொள்வோமா-56 [ஆள்காட்டெல் 1 பவுண்ட் செல்லிடப்பேசி]


நாள்தோறும் ஹைடெக்கான செல் போன்கள் அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. அவைகள் விலையிலும் நேற்று ரிலீஸான செல்போனை விட அதிகமாகவே இருக்கும். இந்நிலையில் உலகின் மிக மலிவான விலையில் கையடக்கமான செல்லிட பேசியை அல்கெடெல் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பிரிட்டானியாவில் மட்டும்தான் இது தற்போது வெளியாகியுள்ளது. அல்கெடெல் ஒன் டச் 232 என பெயரிடப்பட்டுள்ள இதன் விலை வெறும் 1 பவுண்ட்ஸ் மட்டுமே ஆகும்.அதாவது இந்திய மதிப்புக்கு வெறும் 81 ரூபாய்தான்! இந்த சீப்பஸ்ட் போன் மூலம் அழைப்புகளை ரீஸிவ் செய்து கொள்ள, குறுந்தகவல்களை அனுப்ப முடியும்.
Lowest price phone - mar 9
இது தவிர ரேடியோ, கேம்ஸ்,அலாரம், டார்ச், கால்குலேட்டர் போன்ற வசதிகளையும் இது கொண்டுள்ளது. அத்துடன் இதில் 1.5 அங்குல திரையும் இருக்கிறது.ஆக இது இருந்தால் நேரம் காலம் பார்க்காமல் ஆங்க்ரி பேர்ட் ஆடலாம், ஃபேஸ் புக் ஸ்டேட்டஸ் பார்க்கலாம்.
இவ்வளவு குறைந்த விலைக்கு செல்லிடபேசியா என்று அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது அல்கெடெல் ஒன் டச் 232. ஆனாலும் இதை வாங்கி முழுமையாக உபயோகிக்கும் பொருட்டு அதனுடன் மேலும் 10 பவுண்ட்ஸ்கள் (சுமார் 810 ரூபாய்) மதிப்பிலான சில சமாச்சரங்களையும் நீங்கள் வாங்க வேண்டியிருக்கும்.ஆனாலும் ஆயிரம் ரூபாய் கூட மதிப்பு பெறாத இந்த போனுக்கு ஏக டிமாண்டாம்!

(நன்றி: ஆந்தை ரிப்போர்ட்டர்)

உழைப்பு...


”நான் சீதாப்பாட்டி வந்திருக்கேன்… வளையல் போடுறீயளா புள்ளையளா…’’ – இந்தக் குரலுக்கு தஞ்சாவூரை ஒட்டியுள்ள பள்ளி அக்ரஹாரம், திருவையாறு, அரசூர் வட்டாரங்களில் உள்ள எல்லா வீடுகளின் கதவுகளும் திறக்கின்றன. ஒரு கையில் வாளி, இன்னொரு கையில் பை, இடுப்பில் அட்டைப்பெட்டி… இவை அனைத்தையும் சுமந்து கொண்டு வீட்டுக்கு வீடு நின்று குரல் கொடுத்து நகர்கிற சீதாப்பாட்டிக்கு வயது 103 என்றால் நம்பமுடியாது. வார்த்தையில் மட்டுமின்றி பார்வை, நடை அத்தனையிலும் அப்படியொரு தெளிவு!
சீதாப்பாட்டிக்கு சொந்த ஊர் தஞ்சாவூரில் உள்ள மானம்புச்சாவடி. கணவர் ராமசாமி 40 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். மூன்று மகன்கள். 1 மகள். 25க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள். அவர்களில் சிலருக்கு திருமணமாகி பேரன், பேத்தி பார்த்து விட்டார்கள். அவர்கள் யாரையும் அண்டியிருக்கவில்லை சீதாப்பாட்டி. எந்த வீட்டுக்குச் சென்றாலும் அவரிடம் வளையல் வாங்குகிறார்களோ இல்லையோ, தங்கள் வீட்டுப் பெரிய மனுஷியாகப் பாவித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்று சாப்பாடோ, டீயோ கொடுக்கிறார்கள். அடுத்த நொடியில் அந்த வீட்டில் கலந்து, உறவாடத் தொடங்கி விடுகிறார் சீதாப்பாட்டி.
Valaiyal patti - mar 9
‘‘வீட்டுக்காரருக்கு நெசவுத்தொழில். வீட்டிலேயே தறிபோட்டு நெய்வோம். பட்டு நெசவுதான். அந்தக் காலத்துல அவர் நெஞ்சு தர்ற சேலைகளை எடுத்துக்கிட்டு வல்லம், ராஜகிரி, பாபநாசம், கோவிந்தகுடி, திருவையாறுன்னு சுத்தி விப்பேன். அப்போத்தொட்டு இந்த ஜனங்கள்லாம் எனக்கு உறவு. போகப்போக நெசவுத்தொழில் சரியாயில்லை. அவருக்கும் உடம்பு சரியில்லாமப் போச்சு. சிண்டு, சிறுசுகளை வச்சுக்கிட்டு சிரமமாப் போச்சு.
இந்த வளையல் பெட்டியையும், ரப்பர் சாமான்களையும் கையில எடுத்தப்போ எனக்கு 22 வயசு. மொத்தக்கடைல சரக்கை எடுத்துக்கிட்டு வந்து ஊரு ஊராப் போயி விப்பேன்.

ஏற்கனவே தெரிஞ்சவங்ககிறதால எல்லாரும் எங்கிட்ட விரும்பி வளையல் போட்டுக்குவாங்க. இங்கே இளைஞ்சு திரியிற குமரிக எல்லாம் ஆத்தா வயித்துல இருக்கிறப்போ வளைகாப்பு போட்டுவிட்டவ நான்தான்!’’ – பற்கள் சிதைந்த இடைவெளி தெரிய பலமாகச் சிரிக்கிறார் சீதாப்பாட்டி.
திருவையாறு சுற்று வட்டாரத்தில் யார் வீட்டில் வளைக்காப்பு நடந்தாலும் தேடிப் பிடித்து சீதாப்பாட்டியை அழைத்து வந்து விடுகிறார்கள். அவர் வந்து முதலில் வளையல் போட்டவுடன்தான் மற்ற உறவுக்காரர்கள் வளையல் மாட்டி விடுவார்களாம். அந்த அளவுக்கு ராசி கை அவருடையது.
‘‘சீதாப்பாட்டி வந்துட்டா தெருவே கொண்டாட்டமாயிடும்.
எல்லாப் பெண்களும் கூடிருவாங்க. வளையல் போட்டுக்கிறதை விட அது பேசுற கிண்டலைக் கேக்குறதுக்குன்னே வருவாங்க. வளையல் மட்டுமில்லாம, சின்னச்சின்ன பிளாஸ்டிக் பொருட்களையும் எடுத்துக்கிட்டு வரும். சாப்பாடு கொடுத்தா வாங்கிச் சாப்பிடும். ஆனா, பணம் கொடுத்தா வாங்காது. வளையலுக்கு எவ்வளவோ அதை மட்டும் எடுத்துக்கிட்டு மிச்சத்தை அப்படியே திருப்பிக் கொடுத்திடும். ‘வச்சுக்க பாட்டி’ன்னு சொன்னா, உழைக்காத காசு உடம்புல ஒட்டாதுடின்னு உபகதை பேசும். கல்யாணம் தள்ளிப்போற பெண்களுக்கு பாட்டி கையால வளையல் போட்டா உடனே கல்யாணம் கூடிவரும்னு எல்லாரும் நம்புறாங்க.
அதேமாதிரி வளைகாப்பு வைபவத்துல பாட்டி வளையல் போட்டா சுகப்பிரசவம் ஆகும்…’’ என்கிறார் திருவையாறு ஸ்ரீராம்நகரைச் சேர்ந்த புஷ்பராணி.
‘‘மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இருந்தும் ஏன் தனியாக சிரமப்படுகிறீர்கள்?’’- பாட்டியிடம் கேட்டால் இறுக்கமாகப் பேசுகிறார். ‘‘அதது புள்ளை குட்டின்னு ஆயிருச்சு. அவங்கவங்க உழைப்பு, அவங்கவங்க குடும்பத்தைப் பாக்கத்தான் சரியா இருக்கு. பாவம்… இந்த வயசுல அதுகளுக்குச் சுமையா ஏன் நான் போய் உக்காரணும்? அவங்களுக்கு உதவி செய்ய முடியாட்டியும் உபத்திரவம் செய்யாம இருக்கணும். இனிமே எனக்கென்ன இருக்கு? எந்த வீட்டுக்குப் போனாலும், ‘வா பாட்டி’ன்னு உரிமையாக் கூப்பிட்டு, நாலு சோறு போட்டு, தண்ணி கொடுக்க இந்த ஜனங்கள்லாம் இருக்காங்க.
புள்ளைகளை பாக்கணும்னு ஆசை வந்தா, புள்ளைகளுக்கு ஏதாவது தீனி வாங்கிட்டு நேரா கிளம்பிப் போயிருவேன். காலையில போனா ராத்திரிக்கு கிளம்பிருவேன்…’’ என்கிறார் சீதாப்பாட்டி. தஞ்சாவூரில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்கிறார் சீதாப்பாட்டி. அதிகப்பட்சம் 200 ரூபாய். அதை விற்றால் ஐம்பதோ, நூறோ கிடைக்கும். யாரிடமும் கணக்குப் போட்டு கறாராகப் பேச மாட்டார். கொடுப்பதை வாங்கிக்கொள்வார்.
‘‘பாட்டி போற வழியில மனம் பிறழ்ந்தவங்க, முடியாதவங்க நின்னா இருக்கறதை குடுத்துட்டுப் போயிரும். சின்னப்புள்ளைகளுக்கு வளையல் போட்டா காசு வாங்காது. கொடுத்தாலும், ‘புள்ளைகளுக்கு பிஸ்கட்டு வாங்கிக் குடு ஆத்தா’ன்னு சொல்லிடும்…’’ என்று பாட்டி புராணம் பாடுகிறார் ரம்யா.
திருவையாறு பகுதியில் வசிக்கும் ரஹீமா பீவியின் மகள்களுக்கு பாட்டி வளையல் போட்ட பிறகுதான் திருமணம் கூடி வந்ததாம். அதற்குப் பிரதிபலனாக தனக்குச் சொந்தமான ஒரு வீட்டில் பாட்டியை தங்கிக்கொள்ள சொல்லிவிட்டார். தனிக்காட்டு ராணியாக சுதந்திரமாக வாழ்கிறார் சீதாப்பாட்டி. ‘‘அரசு வழங்குகிற முதியோர் உதவித்தொகை வாங்குகிறீர்களா?’’ என்று கேட்டால் பாட்டியின் முகம் கோபத்தில் சிவக்கிறது.
‘‘உழைக்காம வாங்குற காசு உடம்புல ஒட்டுமா..? என் உழைப்பால வர்ற காசு எனக்குப் போதும். உடம்புல வலு இருக்கிற வரைக்கும் என்னால உழைச்சுச் சாப்பிட முடியும். புள்ளைகளுக்கே சுமையா இருக்கக்கூடாதுன்னு நினைச்சுத்தான் இன்னமும் யாவாரம் பண்ணிக்கிட்டு இருக்கேன். அரசாங்கத்துக்கு சுமையா இருக்கச் சொல்றீகளே… வேணாம் தம்பி…’’ என்கிறார் சீதாப்பாட்டி.

(நன்றி: ஆந்தை ரிப்போர்ட்டர்)